ரச்சிதா மகாலட்சுமி திடீர் மெகந்தி: 2-வது திருமணமா?

ரச்சிதா மகாலட்சுமி மறுமணம் செய்யப் போகிறாரா? தற்போது, அந்த கேள்வி இணையத்தில் அதிகம் பரவும் ஒரு ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இதற்க்கு காரணம் அவரது லேட்டஸ்ட் மெஹந்தி கிளிக்ஸ் தான்.

ரச்சிதா மகாலட்சுமி மறுமணம் செய்யப் போகிறாரா? தற்போது, அந்த கேள்வி இணையத்தில் அதிகம் பரவும் ஒரு ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இதற்க்கு காரணம் அவரது லேட்டஸ்ட் மெஹந்தி கிளிக்ஸ் தான்.

author-image
WebDesk
New Update
rachitha

பாப்புலர் சீரியல் நடிகையான ரச்சிதா, சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராமில் மெஹந்தி பூசிய கைகளை காட்டும் ஒரு போஸ்ட்  பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வெளிவந்ததும், அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் மத்தியில் “அவர் மீண்டும் திருமணம் செய்யவுள்ளாரா?” என்ற சந்தேகத்தை தூண்டியுள்ளது.

Advertisment

அவர் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும், இவரது மெஹந்தி போஸ்ட் ரசிகர்களிடம் புதிய பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இது அவர் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கை தொடங்கவிருப்பதாக கருதும் காரணமாக உள்ளது.

பிரபல தமிழ் டெலிவிஷன் நடிகை ரச்சிதா மகாலட்சுமி, 2013ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி, சக நடிகரான தினேஷை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் பல்வேறு சீரியல்கள் மூலம் ஒன்றாக ஜோடியாக நடித்திருந்த நிலையில், அந்தக் காட்சிகள் நேர்மையான காதலாக மாறி, ரியலான வாழ்க்கை துணையாக்கியது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment
Advertisements

இவர்கள் முதன்முறையாக "பிரிவோம் சிந்திப்போம்" என்ற சீரியலில் ஜோடியாக நடித்தபோது, இருவருக்குமான ‘ஆன்-ஸ்கிரீன்’ கெமிஸ்ட்ரி பார்வையாளர்களால் ஆழமாக கவனிக்கப்பட்டது.

அதன் பின்னர் "நாச்சியாபுரம்" போன்ற தொடர்களிலும் இணைந்து நடித்ததன் மூலம், தமிழ் சின்னத்திரையின் பிரபலமான ஜோடியாக திகழ்ந்தனர். உணர்வுபூர்வமான நடிப்புமூலம் அவர்கள் உருவாக்கிய ‘பெஸ்ட் ஸ்க்ரீன் கபில்’ இமேஜ் ரசிகர்களின் மனதில் நீண்டநாள் இடம் பிடித்தது.

பல வருடங்களுக்குப் பிறகு, இவர்களது உறவில் பிளவு ஏற்பட்டது. 2022 ஆரம்பத்தில் பிரிந்து வாழத் தொடங்கினர். தினேஷ் அவர்களது பிரிவை உறுதி செய்தாலும், இன்னும் லீகல் டிவோர்ஸ் முடிவடையவில்லை என்று செய்திகள் வந்தன. அதன் பின், ரச்சிதா தனிப்பட்ட வாழ்க்கையைப் ப்ரைவேட்டாக வைத்தார். 

அவரது இந்த மெஹந்தி பதிவைக் கண்ட சிலர், “இது அவரது இரண்டாவது திருமணத்தின் அறிகுறியா?” என நம்பத் தொடங்கினர். அந்த வகையில், சிலர் நேரடியாக “ரச்சிதா மறுமணம் செய்கிறாரா?”, “எப்போது திருமணம்?” என கேள்விகளும் எழுப்பினர்.

இதே நேரத்தில், மற்றொரு பகுதி ரசிகர்கள், “இது திருமணம் அல்ல, ஏதாவது குடும்ப நிகழ்ச்சி அல்லது உறவினர் திருமணத்திற்காக போடப்பட்ட மெஹந்தி தான்” என்று கூறினார்கள். அவர்கள் இதைப் பார்த்து, “அது யாரோ ரிலேட்டிவ் கல்யாணமாக இருக்கலாம்”, “பொதுவாக இப்படி என்ஜோய் பண்ணுவாங்க” என்று கூறியிருந்தனர். 

ரசிகர்கள் தற்போது எதிர்பார்க்கும் கேள்வி – “இது திருமணமா அல்லது வேறு ஏதாவது விழாவா?” என்பது தான்.  ரச்சிதா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அவரது மௌனம் தான் ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: