பாரத் ஜோடோ யாத்ராயில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், ராகுல்காந்தியுடனான உரையாடலின்போது அவர் கமல்ஹாசனுக்கு புகைப்படம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன், படங்களில் நடிப்பு அரசியல் ஈடுபாடு என பிஸியாக இருந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரா டெல்லி சென்றடைந்தபோது அதில் கமல்ஹாசன் பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சமீபத்தில் அரசியல், இந்திய சமூகம் மற்றும் அவர்களது தொழில் பயணங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ ராகுல்காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த உரையாடலில், கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி புலி தண்ணீர் குடிக்கும் புகைப்படம் ஒன்றை பரிசளித்தார்.
இந்த வீடியோ பதிவின் தொடக்கத்தில், ராகுல்காந்தி தனது மருமகனும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வத்ராவின் மகன் ரைஹான் வத்ரா ஒரு புகைப்படக் கலைஞர் என்றும், அவர் கமல்ஹாசனுக்கு வழங்க தான் விரும்பிய அழகான புகைப்படம் ஒன்றை எடுத்ததாகவும் கூறுகிறார். “எனது மருமகன் ஒரு புகைப்படக் கலைஞர், அதனால் நான் அவரிடம், எனது நண்பர் கமல்ஹாசனுக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறேன். அதற்காக படம் ஒன்றைக் கொடுங்கள்’ என்றேன்.
அவர் என்ன கொண்டுவந்தார் என்பதை நீங்கள் யூகிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அவர் எனக்கு என்ன படம் கொடுத்தார் என்று நினைக்கிறீர்கள் என்று ராகுல்காந்தி கேட்க, கமல்ஹாசன், நடிகர் சிரித்துக்கொண்டே, "எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார். அதன்பிறகு “போய் பார்க்கலாம்” ராகுல்காந்தி சொல்ல இருவரும் மூடிய கேன்வாஸை காந்தி திறந்து வைக்கிறார். அதில் ஒரு புலி தண்ணீர் குடிக்கும் புகைப்படம் உள்ளது.
ஏன் இந்த பரிசை தேர்வு செய்தார் என்பதை விளக்கிய ராகுல்காந்தி "இது உங்கள் அணுகுமுறை மற்றும் வாழ்க்கையின் அணுகுமுறையைப் பற்றி கூறுகிறது, மேலும் நீங்கள் ஒரு சிறந்த இந்தியன் மற்றும் சிறந்த சாம்பியன் என்பதை இந்த புகைப்படம் எங்களிடம் கூறுகிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தொடர்பான பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற தனது அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதனிடையே 4 வருட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் கடந்த ஜுன் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்தியன் 2 பிக்பாஸ் என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், சமீபத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா டெல்லி சென்றடைந்தபோது அதில் இணைந்தார். அப்போது பேசிய அவர், “நான் ஏன் இங்கு வந்தேன் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். எனது தந்தை காங்கிரஸ்காரர். நான் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தேன்.
எனது சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினேன், ஆனால் நாட்டைப் பொறுத்தவரை, அனைத்து அரசியல் கட்சி கோடுகளும் மங்கலாக வேண்டும். நான் அந்த வரியை மங்கலாக்கி இங்கே வந்தேன் என கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/