Advertisment

Raja Rani2 : பார்வதியை பொதுவில் அசிங்கப்படுத்த முயன்ற அர்ச்சனா; காப்பாற்றிய சந்தியா!

அர்ச்சனா பார்வதியை அசிங்கப்படுத்த முயன்ற சம்பத்தைக் கேள்விப்பட்டு செந்தில் அர்ச்சனாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுகிறான். இப்படி விறுவிறுப்பாக இந்த வார புரோமோ அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Raja Rani 2 serial, Raja Rani 2 serial latest promo, vijay tv, Archana try to shaming Parvathi, Sandhya saves parvathi, ராஜா ராணி 2 சீரிஅல், பார்வதியை பொதுவில் அசிங்கப்படுத்த முயன்ற அர்ச்சனா; பார்வதியைக் காப்பற்றிய சந்தியா, சரவணன், செந்தில், சித்து, ஆல்யா மானசா, Alya Manasa, Sidhu, Vaishnavi Sundar, Vijay TV Raja Rani 2 serial

ராஜா ராணி 2 சீரியலில், அர்ச்சனா தனது நாத்தனார் பார்வதியின் கல்யாணத்தை தடுப்பதற்காக பார்வதியை பொதுவெளியில் அசிங்கப்படுத்த திட்டமிடுகிறாள். ஆனால், பார்வதி சந்தியாவின் உதவியைக் கேட்க, அவள் விரைந்து வந்து காப்பாற்றுகிறாள். அர்ச்சனாவின் சதி செயலைக் கேள்விப்பட்ட செந்தில் அர்ச்சனாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுகிறான்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல், ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், வைஷ்ணவி சுந்தர், பிரவீனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ராஜா ராணி 2 சீரியலில் ஓவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகும் எபிசோடுகளின் புரோமோ வெளியிடப்படும். இந்த புரோமோக்கள் சீரியலின் மீதான எதிர்பார்ப்பைக் அதிகரித்து ரசிகர்களை ஈர்க்கும் அந்த வகையில், இந்த வாரம் ராஜா ராணி 2 சீரியலின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதில், அர்ச்சனா தனது தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை பாஸ்கர் தனது நாத்தனார் பார்வதியைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி பெண் கேட்டதால் திருமணமும் உறுதியாகிறது. ஆனால், அர்ச்சனா, பாஸ்கரை தனது தங்கைக்குதான் கட்டி வைக்க வேண்டும் என்று பார்வதியின் கல்யாணத்தை நிறுத்த முயற்சிக்கிறாள். அதற்காக, பார்வதியை தனது துணிக்கடை கொடவுனுக்குள் அனுப்பி வைத்துவிட்டு, அவளுடைய முன்னாள் பாய் ஃபிரெண்ட் விக்கியை வரவழைத்து உள்ளே அனுப்புகிறாள். பிறகு கதவை பூட்டிக்கொண்டு, உன்னை ஊரைக்கூட்டி எப்படி அசிங்கப்படுத்துகிறேன் பாரு என்று கூறிக்கொண்டு அய்யோ எங்க கடைக்குள்ள திருடன் வந்துட்டான் என்று சத்தம் போடுகிறாள். கூட்டம் கூடிவிடுகிறது. இதைப்பார்த்த, பார்வதி பயந்துபோய், தனது மற்றொரு அண்ணி சந்தியாவுக்கு போன் பண்ணி, அண்ணி எப்படியாவது என்னை காப்பாத்துங்கள் என்று கேட்கிறாள். உடனடியாக விரைந்து வரும் சந்தியா, பின் வாசல் வழியாக சென்று கதவைத் திறந்து பார்வதியை அழைத்துச் செல்கிறாள். எல்லோரும் வந்த பிறகு, உள்ளே சென்று பார்த்தால், விக்கி மட்டும்தான் இருக்கிறான். இந்த சம்பத்தைக் கேள்விப்பட்டு செந்தில் அர்ச்சனாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுகிறான். இப்படி விறுவிறுப்பாக இந்த வார புரோமோ அமைந்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முந்தைய எபிசோடுகளில்தான், சந்தியா, பார்வதியை ஒரு தனி வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்ற விக்கியிடம் இருந்து காப்பாற்றினாள். இப்போது, அர்ச்சனாவின் சதியில் இருந்தும் காப்பாற்றுகிறாள்.

ராஜா ராணி 2 சீரியலின் இந்த வார பரபரப்பான விறுவிறுப்பான புரோமோ ரசிகர்களை ஈர்த்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வார எபிசோடில் என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பை இந்த புரோமோ ஏற்படுத்தியுள்ளது

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Alya Manasa Raja Rani 2 Raja Rani 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment