Vijay TV Serial: வீட்டை விட்டுப்போக தயாராகி நிற்கும் சந்தியா; மாமியார் ஏற்றுக்கொள்வாரா?

Raja Rani 2 Serial: சந்தியாவை அவளுடைய மாமியார் சிவகாமி, நல்ல மருமகளாக ஏற்றுக்கொண்டு வீட்டிலேயே இருக்கச் சொல்வாரா? இல்லை வீட்டைவிட்டுப் போகச் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Raja Rani 2 Serial: சந்தியாவை அவளுடைய மாமியார் சிவகாமி, நல்ல மருமகளாக ஏற்றுக்கொண்டு வீட்டிலேயே இருக்கச் சொல்வாரா? இல்லை வீட்டைவிட்டுப் போகச் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Raja Rani 2, Raja Rani 2 Serial today, Raja Rani 2 today episode, Sandhya ready to go away from house, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடு, வீட்டை விட்டுப்போக தயாராகி நிற்கும் சந்தியா, சிவகாமி என்ன சொல்வார், சரவணன், அர்ச்சனா, செந்தில், பார்வதி, What is decision of Mother in law Sivagami, saravanan, archana, sendhil, parvathy, raja rani 2 serial story

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அர்ச்சனா அறைக்குள் தனியாக உட்கார்ந்துகொண்டு காற்றில் கைகளை அசைத்து ஏதோ பிளான் போட்டுக்கொண்டிருக்கிறாள். அப்போது உள்ளே வரும் அர்ச்சனாவின் கணவன் செந்தில் என்ன திட்டம் போடுகிறாய், உன்னைத்தான் எந்த திட்டமும் போடாத, என்னை கேட்காமல் எதையும் செய்யாத என்று சொன்னேன் இல்லை என்று கூறுகிறான். அதற்கு அர்ச்சனா நான் எந்த திட்டமும் போடவில்லை. ஆனால், உங்க அம்மா சந்தியாவுக்கு கொடுத்த 3 மாசம் கெடு இன்னையோட முடியுது. உங்க அம்மா சந்தியாவை வீட்டை விட்டு அனுப்பிடுவாங்களா இல்லை இங்கேயே இருக்கச் சொல்ல்வாங்களா என்று கேட்கிறாள். அதற்கு செந்தில் அது அவங்களோட பிரச்னை. நீ எதற்கு அதைப்பற்றி யோசிக்கிற என்று கேட்கிறான். ஆனாலும் விடாத அர்ச்சனா, என்ன முடிவு எடுப்பாங்க என்று கேட்கிறாள்.

அதற்கு செந்தில், அம்மா சந்தியாவை விட்டுவிட்டு உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பப் போகிறார்கள் என்று கூறுகிறான். இதைக் கேட்டு ஷாக் ஆன அர்ச்சனா, ஒருவேளை என்னை வீட்டை விட்டு அனுப்பினாள் நீங்க என்ன செய்வீங்க என்று கேட்கிறாள். அதற்கு, இது போல யோசித்து கேள்வி கேட்பதை எல்லாம் விட்டுவிட்டு ஆக வேண்டிய வேலையைப் பாரு என்று கூறிவிட்டு வெளியே செல்கிறான். செந்தில் போன பிறகு, அர்ச்சனா, சந்தியாவை வீட்டைவிட்டு அனுப்ப வேண்டும் என்றால், அத்தையோட ஈகோவை தூண்டிவிட வேண்டும் என்று கூறிவிட்டு மாமியார் சிவகாமியைப் பார்க்கப்போகிறாள்.

சிவகாமி பூஜை அறையில், கண்களை மூடி அமர்ந்து சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறார். அங்கே உள்ளே சென்ற அர்ச்சனா, எம்மேல உங்களுக்கு கோபம் இருக்கலாம். அந்த கோபத்துக்கு தகுதியான ஆள்தான் நான். ஆனால், நான் செய்த தவறால அந்த சந்தியாகிட்ட நீங்க மன்னிப்பு கேட்கிற மாதிரி ஆகிப்போச்சு. அந்த சந்தியாவை வீட்டை விட்டு அனுப்பினாள் அவள் போலீஸ்ல புகார் கொடுப்பாள். அவளுக்கு வக்கில் எல்லாம் தெரியும். உங்களுக்கு வேற வாய்ப்பே இல்லை. நீங்கள் அவளை விட்டிலேயே இருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லி மாமியார் சிவகாமியின் ஈகோவை தூண்டிவிடுகிறாள். ஆனால், அர்ச்சனாவுடன் பேச விரும்பாத சிவகாமி, அமைதியாக இருக்கிறார்.

Advertisment
Advertisements

அடுத்த காட்சியில், பெட்ரூமில் சந்தியா, மாமியார் சிவகாமி தன்னை நல்ல மருமகளாக நிரூபிப்பதற்கு கொடுத்த 3 மாசம் கெடு முடிந்துவிட்டது. என்ன சொல்லப் போகிறாரோ என்று யோசித்துக்கொண்டு இருக்கிறாள். சரவணனும் அம்மா என்ன சொல்லப் போகிறார்களோ என்று யோசித்துக்கொண்டிருக்கிறான். அம்மா நல்ல முடிவு எடுப்பார் என்று சரவணன் தனது மனைவி சந்தியாவுக்கு ஆறுதல் சொல்கிறான். அதே யோசனையில் இருவரும் நீண்ட நேரம் தூங்காமல் அப்படியே இருக்கிறார்கள்.

மறுநாள் காலை பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் சரவணன் தூங்கிக்கொண்டிருக்கிறான். திடீரென கண் விழிக்கும் சரவணன் படுக்கையில் இருந்து எழுந்து நேரம் ஆகிவிட்டது. சந்தியா எங்கே சீக்கிரம் எழுந்துவிட்டாங்களா என்று கிளம்புகிறான். சந்தியா டிரஸ்ஸிங் ரூம் உள்ளே தனது சேலை துணி மணிகளை எடுத்து சூட்கேஸில் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள். சந்தியா கிளம்புவதற்கு தயாராகிக்கொண்டிருப்பதைப் பார்த்த சரவணன், ஏங்க என்ன பண்றீங்க, அம்மா ஏதாவது சொன்னாங்களா என்று கேட்கிறான். அதற்கு சந்தியா, இல்லை, அம்மா வீட்டை விட்டு கிளம்பச் சொன்னால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால்தான், முன்கூட்டியே நான் கிளம்புவதற்கு தயாராகிவிட்டேன் என்று கூறுகிறாள்.

அதற்கு, சரவணன் அம்மா என்ன சொல்றாங்கனு கேளுங்க, அப்படியே அவங்க உன்னை போக சொன்னாலும் நான் விட்விடுவேனா, நான் உங்க கழுத்தில தாலி கட்டியிருக்கேன். நீங்க என் பொண்டாட்டிங்க, என்னை நம்புங்க. நான் உங்கமேல வச்சிருக்கிற நம்பிக்கை அளவுக்குகூட நீங்க உங்கமேல நம்பிக்கை வைக்கலையேங்க என்று கேட்கிறான். அதற்கு சந்தியா நான், நீங்க வைச்சிருக்கிற நம்பிக்கை எல்லாம் முக்கியம் இல்லை. அத்தை என்ன சொல்றாங்க என்பதுதான் முக்கியம் என்று கூறுகிறாள்.

அடுத்த காட்சியில், வீட்டில் நடு முற்றத்தில் சிவகாமி துளசி மாடம் அருகே கண்களை மூடி அமர்ந்து பூஜை செய்துகொண்டிருக்கிறார். அப்போது அந்த வீட்டில் சரவணனின் சின்ன தம்பி அப்பாவுக்கு குட்மார்னிங் சொல்லி பேசிக்கொண்டிருக்கிறான்.

அதே நேரத்தில், வீட்டின் சமையல் அறையில், அர்ச்சனா எல்லோருக்கும் ஒரு டம்ப்ளரில் பருப்பு அளந்து போட்டுக்கொண்டு வருகிறாள். எல்லோருடைய பெயரையும் சொல்லி போட்டுக்கொண்டிருக்கிறாள். அப்போது சந்தியா பெயர் வரும்போது, போடலாமா வேண்டாமா, அத்தை சொன்ன கெடு முடியுது. அத்தை எப்படியும் சந்தியாவை அனுப்பிடுவாங்க… இதை வைத்தே அத்தை என்ன முடிவு எடுக்கிறாங்கனு கேட்டுவிடுவோம் என்று பருப்பு டப்பாவுடன் வீட்டின் நடு கூடத்துக்கு வருகிறாள். அங்கே சிவகாமி அப்படியே கண்களை மூடி அமர்ந்து சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

அங்கே இருக்கும் சரவணனின் சின்ன தம்பியும் தங்கை பார்வதியும் என்ன டப்பாவுடன் வந்திருக்கீங்க… நீங்கதான் சமைக்கிறீங்கனு தெரியும் என்று கிண்டல் செய்கிறார்கள். அர்ச்சனா அவர்களை மனதில் திட்டிக்கொண்டே, “இல்ல மாமா, தினமும் சமைக்கும்போது, எல்லோருக்கும் ஒரு புடி பருப்பு அளந்து போடுவேன். இன்னைக்கு, சந்தியாவுக்கு போடலாமா, ஏன்னா, சந்தியாவுக்கு அத்தை சொன்ன கெடு முடியுது. அவங்க எப்படியும் அனுப்பிடுவாங்க” என்று கூறி கேட்கிறாள். இதைக்கேட்டு மாமானா அதிர்ச்சி அடைந்து என்ன சொல்வது என்று வாயடைத்துப்போய் நிற்கிறார். அந்த நேரம் பார்த்து, சந்தியா நடு கூடத்திற்கு கதவைத் திறந்துகொண்டு துணி மணி பேக் உடன் வந்து வீட்டை விட்டு கிளம்புவதற்கு தயாராக வந்து நிற்கிறாள். சந்தியா வந்து நிற்பதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இனிவரும் எபிசோடில், சந்தியாவை அவளுடைய மாமியார் சிவகாமி, நல்ல மருமகளாக ஏற்றுக்கொண்டு வீட்டிலேயே இருக்கச் சொல்வாரா? இல்லை வீட்டைவிட்டுப் போகச் சொல்வாரா என்பதை தெரிந்துகொள்ள காத்திருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Raja Rani Vijay Tv Raja Rani Serial Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: