Advertisment

Tamil Serial News: சந்தியாவுக்கும் சரவணனுக்கும் என்னதான் பிரச்னை... புரியாமல் தவிக்கும் சுந்தரம்!

மயில் வந்து சுந்தரத்திடம், சரவணன் ஐயா என்ன சொன்னார் என்று கேட்கிறாள். அதற்கு சுந்தரம், என்னனு சொல்ல மாட்டேங்கிறான், ரெண்டு பேருக்கும் சண்டையானு தெரியல. ஆனால், அவன் மனசுல ஏதோ ஒரு நெருடல் இருக்குமா என்று கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Vijay TV, Vijay TV raja rani 2 serial, raja rani 2, raja rani 2 serial today story, Sandhya Saravanan clash, alya manasa, sidhu, sundaram, sivagami, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடு, சந்தியா, சரவணன், ஆல்யா மானசா, sandhya, alya manasa in raja rani 2, tamil tv serial news, raja rani 2 serial news

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் சந்தித்து வருகிறது. அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், இரவு தூங்கச் செல்லும் நேரத்தில் சுந்தரம் வீட்டில் சாய்வு நாற்காலியை சுத்தியல் கொண்டு தட்டி ரிப்பேர் செய்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்த சிவகாமி, உங்களுக்கு நேரம்காலமே இல்லையா, தூங்கப் போற நேரத்தில ‘டொக்’ ‘டொக்’னு தட்டுறீங்களே என்று கேட்கிறார். அதற்கு, சுந்தரம், உனக்கு இந்த வீட்ல உன் சத்தத்தை தவிர வேற எந்த சத்தம் கேட்டாலும் புடிக்கிறதில்லை என்று கூறுகிறார். இதைக் கேட்ட சிவகாமி, சுற்றிவளைச்சு பேசாம நேரா பேசுங்க, மத்தவங்க மாதிரி உள்ள ஒன்னு வச்சுகிட்டு வெளியே ஒன்னு பேச எனக்கு தெரியாது என்று கூறுகிறார்.

அதற்கு சுந்தரம், “சொல்வதை நேரடியாக சொல்வது தப்பில்லை. ஆனால், சொல்கிற முறைனு ஒன்னு இருக்கு இல்லை” என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி நான் இப்படிதான் பேசுவேன்னு எல்லோருக்கும் நல்லா தெரியுமே என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட சுந்தரம், “சிவகாமி நீ காரணம் இல்லாம கோபப் படமாட்ட என்று நினைத்துக்கொண்டிருந்ததுகூட இப்போது மாறிப்போய்விட்டது. உண்மை சொல்றேன். மானம் மரியாதை ரொம்ப முக்கியம். யாரும் தப்பு பண்ணிடக் கூடாதுனு கவனமா இருக்கிற நீ, அதே பொறுப்போட கவனமா நடந்துக்கனும் இல்லையா” என்று சொல்கிறார்.

அதற்கு சிவகாமி, “ஓஹோ, அப்போ இந்த வீட்ல நாந்தான் பொறுப்பு இல்லாம நடந்துக்கிறேன்னு சொல்றீங்களா” என்று கேட்கிறார்.

இதற்கு சுந்தரம், “இன்னைக்கு நடந்துகிட்ட சிவகாமி, நீ தப்பு பண்றனு அப்பப்போ உங்கிட்ட சொன்னதான் புரியும்” என்று கூறுகிறார்.

இதற்கு சிவகாமி, “சொல்லுங்க, சொல்லுங்க, காலையில சரவணன் நான் தப்பு பண்றேன்னு சொன்னான், இப்போ உங்க முறை சொல்லுங்க” என்று கூறுகிறார்.

இதைக் கேட்டு சுந்தரம், “சரவணன் ஏன் உன்னை அப்படி சொல்லனும், சந்தியாவோட வீட்ல இருந்து வந்த புடவைக்கு என்ன குறை, நீ அப்படி பேசியிருக்க கூடாது இல்லை.” என்று கேட்கிறார். இதற்கு சிவகாமி, “ஆமாம், சந்தியா போன்ல பேசினதுக்கு அப்புறம்தான் நானே புரிஞ்சுகிட்டேன்.” என்று கூறுகிறார்.

இதையடுத்து, சுந்தரம், “பிறகு ஏன் நீ சரவணன் பேசியை இன்னும் மனசுல வச்சுகிட்டு, சந்தியாவோட அண்ணனை உனக்கு பிடிக்கலனா அதை அவங்ககிட்ட நேரடியாக காட்றதோட நிறுத்திக்கோ, அதை ஏன் நீ சந்தியா கிட்ட காட்ற, அதனாலதான் சரவணனுக்கு கோபம் வந்துச்சு. அவனும் எவ்வளவுதான் பொறுப்பான் சொல்லு” என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி, “இதுக்கு முன்னால சரவணனுக்கு கோபமே வந்தது இல்லைனு நீங்க நினைக்கிறீங்களா? வந்திருக்கு. ஆனால், அவன் எந்த அளவுக்கு கோபத்திலும் பொறுமையா நிதானம இருப்பான். இப்போ அந்த சந்தியாவுக்காக எங்கிட்ட கோபத்தை காட்டறான். அதைத்தான் என்னால தாங்கவே முடியல.” என்று கூறுகிறார்.

இதற்கு சுந்தரம், “நீ அதை நினைச்சு சந்தோஷப்படனும், சரவணன், சந்தியாவை தன்னோட பொறுப்பு உரிமைனு நினைக்கிறான். அவ மேல அன்பா இருக்கிறான். அதனாலதான், உன்மேல கோபம் வந்திருக்கு” என்று கூறுகிறார். ஆனால், தொடர்ந்து பேசும் சிவகாமி, “அவள் என் புள்ளையை புரிஞ்சு நடந்துகிட்டு அவளுக்காக எங்கிட்ட கோபப்பட்டானா சரி, இங்கே கதை அப்படி இல்லையே, அவன் மேல அன்பே இல்லாத ஒருத்திக்காக, அவன் எங்கூட சண்டை போடறாங்க” என்று கூறுகிறார். அதற்கு சுந்தரம் அப்படி உனக்கு தோணுச்சுனா அவங்கிட்ட நேரடியா பேசு என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசும் சிவகாமி, தனது மகன் சரவணன் பேச்சிலும் குணத்திலும் ஒரு கோபம் தெரியுது. சந்தியாவுக்காக பேசுகிறானே தவிர அவகூடவும் சரியா பேசல என்று கூறுகிறார். சுந்தரமும் சரி என்னனு பார்க்கலாம் என்று கூறுகிறார்.

சந்தியா இரவு 11 மணி ஆகியும் சரவணன் ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று யோசிக்கிறாள். சரவணன் கடையிலயே இருக்கிறானா என்று பார்க்க கிளம்புகிறாள். அப்போது, வேலைக்காரி மயிலும் வந்து என்ன என்று கேட்கிறாள். சரவணன் இன்னும் வராதது பற்றி கூறுகிறாள். சரவணன் கடையில் இருக்கிறானா என்று பார்க்க கடைக்கு போவதாகக் கூறிவிட்டு செல்கிறாள்.

கடையில் சரவணன் கடையில் தனியாக படுத்துகொண்டிருகிறான். சந்தியா கடைக்கு சென்று ஏன் வீட்டுக்கு வரவில்லை என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், சீசன் டைம், 2-3 ஆர்டர் கிடைச்சிருக்கு, அதனால கடையில இருந்து வேலை செய்கிறேன் என்று சொல்கிறான். இதைக்கேட்டு சந்தியா ஆனால், நான் வரும்போது நீங்க வேலை செய்யலையே என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துட்டு வேலை செய்கிறேன் என்று சொல்கிறான். ஆனால், சந்தியா விடாமல் நீங்க பொய் சொல்லாதீங்க, பக்கத்துலயே வீடு இருக்கும்போது வீட்டுக்கு வராமல், இங்கேயே படுத்துட்டீங்க ஏன், நீங்க என் மேல கோபமா இருப்பது வீட்ல அத்தை, மாமா, மயில் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்குது. என்ன சொல்லுங்க மனசுல இருப்பது சொல்லுங்க, மனசுல இருக்கிற கோபத்தை வெளியே சொல்றதுக்கு உங்களுக்கும் உரிமை இருக்குது என்று கூறுகிறாள். ஆனால், சரவணன், உங்களுக்கு விவாகரத்து வேண்டுமா என்று வெளிப்படையாக கேட்டுவிட்டால், நல்லா இருக்காது என்று நினைத்து அமைதியாகிவிடுகிறான். நீங்கதான் சொல்லுங்க என்று கேட்கிறான். ஆனால், சந்தியா எதுவுமே புரியாமல் வருத்தத்துடன் கிளம்பி வீட்டுக்கு செல்கிறாள்.

மறுநாள் காலையில் மயில், சுந்தரத்திற்கு காபி கொடுக்கிறாள். அப்போது சரவணன் இரவு வீட்டுக்கு வராதது பற்றி கூறுகிறாள். கடையிலதான் இருந்தாரு, பிறகு சந்தியா கடைக்கு போய் பார்த்து கூப்பிட்ட பிறகும் சரவணன் வராததைப் பற்றி கூறுகிறாள். இதைக்கேட்டு ஷாக் ஆகும் சுந்தரம், இது என்ன புது பழக்கமாக இருக்கிறது என்று பேசிக்கொண்டிருக்கும்போதே சரவணன் வருகிறான். மயில் சரவணனிடம் காபியைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து போய்விடுகிறாள்.

சுந்தரம் தனது மகன் சரவணனை, அவனிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று உட்கார வைத்து பேசுகிறார். சரவணா குடும்பத்தில மூத்தவனா நீ தான் பொறுப்பை சுமந்த. உங்க அம்மா சிவகாமி கத்துவா ஆனால், அவதான் என் பலமே. ஆனால், எல்லாத்தையும் சரியா பார்த்துக்குவாள். அவளுக்கு தெரியாமல் நான் எந்த முக்கியமான விஷயத்தையும் செய்யல. நீ நேத்து நைட் வீட்டுக்கு வரல. இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியுமானுகூட எனக்கு தெரியல. ஆனால், சந்தியா அவ மட்டும்தான் உன்னை தேடி வந்திருக்கிறா. அதான் பொண்டாட்டி” என்று கூறுகிறார்.

இதைக் கேட்டு சரவணன், “அப்பா இது சீசன் டைம், பெரிய ஆர்டர் எல்லாம் வந்திருக்கு. இன்னும் 2-3 நாளைக்கு அப்படிதான் இருக்கும். இதை சந்தியாகிட்டயும் சொல்லிட்டேன். ஒன்னும் இல்லை” என்று கூறுகிறான்.

இதற்கு சுந்தரம், “டேய் நான் உன் அப்பாடா, எனக்கு உன்னை நல்லா தெரியும். எதையும் எங்கிட்ட மறைக்காதடா, பாவம்டா சந்தியா. தொழிலைப் பாரு, அதே சமயத்துல சந்தியாவையும் கவனிச்சுக்குடா, இல்லைனா உழைப்புக்கும் சம்பாத்தியத்துக்கும் அர்த்தம் இல்லாம போயிடும். புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் உனக்கும் சந்தியாவுக்கும் இடையில ஒரு அழகான நட்பு இருக்குடா. அதை எந்த காலத்திலயும் விட்றாத. மனசுல எந்த வருத்தம் இருந்தாலும் அதை தெளிவா ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசிடுங்க… சந்தியா உங்க அம்மா சொல்ற மாதிரி இல்லடா. அவ ரொம்ப நல்ல பொன்னுடா. அவதான் இந்த வீட்டுக்கு நல்ல மருமகள். உனக்கு நல்ல மனைவியா இருப்பாடா. ரெண்டு பொருத்தமான ஜோடினு நம்பிகிட்டு இருக்கேண்டா. அதை பொய்யாகிடாதடா” என்று கேட்கிறார். இதைக்கேட்டு சரவணன் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்துவிட்டு எனக்கு நிறைய வேலை இருக்கு என்று புறப்பட்டு செல்கிறான்.

சரவணன் போன பிறகு, மயில் வந்து சுந்தரத்திடம், சரவணன் ஐயா என்ன சொன்னார் என்று கேட்கிறா. அதற்கு சுந்தரம், என்னனு சொல்ல மாட்டேங்கிறான், நிஜமா வேலை டென்ஷனா என்னனு தெரியல. ரெண்டு பேருக்கும் சண்டையானு தெரியல. ஆனால், அவன் மனசுல ஏதோ ஒரு நெருடல் இருக்குமா என்று கூறுகிறார்.

அடுத்த காட்சியில், இரவு சந்தியா பெட்ரூமில் இருக்கிறாள். அப்போது சரவணன் வழக்கம் போல உள்ளே வந்து பாய் எடுத்து கீழே படுப்பதற்காக போடுகிறான். ஆனால், சந்தியா, அவனிடம் இன்னைக்கு என்ன என்று கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நீங்க பெட்லயே படுங்க என்று கூறுகிறாள். சரவணன் வேண்டாம் என்று தரையிலேயே படுக்கப் போகிறான். சந்தியா தலையனை எடுத்து வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்கிறாள். சரவணன் அந்த தலையனைத் தரும்படி இழுத்து கேட்கிறான். ஆனாலும், சந்தியா தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறாள். பிறகு, சரவணன், நான் அப்படியே தூங்குகிறேன் என்று படுக்கப் போகிறான். ஆனால், சந்தியா சரி என்று தலையனையை கொடுக்கிறாள். சரவணன் தூங்கத் தொடங்குகிறான். அப்போது, சந்தியா, இன்னைக்கு என்ன ஆனாலும் பேசிவிட வேண்டியது என்று நினைத்துக் கொண்டு டிராவில் இருக்கிற வளையல்களை எடுத்து சத்தம் ஏற்படுத்துகிறாள்.

அந்த சத்தத்தில் சரவணன் தூக்கம் வராமல் எழுந்து என்ன ஆச்சு ஏன் இப்படி சத்தம் போடுறீங்க என்று கேட்கிறான். அதற்கு சந்தியா, டிரா குப்பையாக இருந்தது, பகல்ல நேரம் இல்லை அதான் இப்போ கிளின் பன்றேன் என்று கூறுகிறாள். பிறகு, சரவணனிடம் எப்படியாவது என்ன பிரச்னை என்று கேட்டுவிட வேண்டும் என்று ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து சரவணனிடம் இந்த புத்தகத்துல புதிர் இருக்கு நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க என்று கேட்கிறாள். அதற்கு சரவணன் நான் படிக்காதவன் எனக்கு புதிர் எல்லாம் தெரியாதுங்க என்று கூறுகிறான்.

சந்தியா விடாமல், தொடர்ந்து இந்த புதிருக்காச்சும் பதில் சொல்லுங்க என்று கூறுகிறாள். அதற்கு சரவணன், ஏங்க உங்களுக்கு சரினு தோணுச்சுனா எதை வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் செய்வீங்களா, அடுத்தவங்க கஷ்டம் எல்லாம் உங்களுக்கு புரியவே புரியாது இல்ல என்று கேட்கிறான். இதைக் கேட்டு சந்தியா வருத்தத்துடன் என்னமோ ரொம்ப அப்செட் ஆகியிருக்கிறார் என்று யோசிக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Alya Manasa Raja Rani 2 Raja Rani Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment