/tamil-ie/media/media_files/uploads/2020/12/rajinikanth-4.jpg)
Annathe stopped due to corona : இந்த ஆண்டின் துவக்கத்தில் நடிகர் ரஜினி காந்த், இயக்குநர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 40% படபிடிப்பு முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு இடையிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் மீண்டும் படபிடிப்பு துவங்கியது.
மேலும் படிக்க : நயன்- விக்னேஷ் சிவனை பிரித்த அண்ணாத்தே..!
ஆனால் படபிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படபிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் ட்வீட் செய்துள்ளது. மேலும், ரஜினிகாந்த் மற்றும் பிற குழு உறுப்பினர்கள் நெகட்டிவ் முடிவுகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மிகுந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அண்ணாத்தே படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படிப்பிடிப்பு முடிந்த பிறகு முழுநேரம் அரசியலில் ஈடுபட இருப்பதாக ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியில், கட்சி துவக்க விழா எப்போது என்று அறிவிக்க இருப்பதாக அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.