தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவருமே இரு துருவங்கள் என்றாலும் கூட, கமல்ஹாசனின் ஒரு படத்தை பார்த்து ரஜினிகாந்த் பதட்டம் அடைந்ததாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமாவன இருவர் ரஜினிகாந்த் கமல்ஹாசன். நடிப்புத்திறமையை வித்தியாசமாக வெளிப்படுத்தி வரவேற்பை பெறுவது கமல்ஹாசன் என்றால், தனது நடிப்பையை ஸ்டைலாக மாற்றி ஸ்கோர் செய்பவர் தான் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் என இருவருக்குமே பொருத்தமான அடைமொழி உள்ளது.
அதேபோல் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் தான் கமல்ஹாசன். இவர் நடிப்பின் உச்சத்தில் இருக்கும்போதுர், அபூர்வ ராகங்கள் படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் தான் ரஜினிகாந்த். அதன்பிறகு இருவரும் இணைந்து பல படங்களில் நடித்ததை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் தனி ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதேபோல் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் படங்களும், ஒரே நாளில் வெளியாகும்போது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறியதில்லை. அந்த வகையில் கடந்த 1987-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் மனிதன், கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படம் வெளியானது. இதில் மனிதன் படம் சாதாரண கமர்ஷியல் அம்சங்கள் கொண்ட படமாக இருந்த நிலையில், நாயகன் படம் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக அமைந்துள்ளது.
இந்த இரு படங்களும் வெளியானபோது, இயக்குனர் பஞ்சு அருணாசலம் ரஜினிகாந்தை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவர், கமல்ஹாசனின் நாயகன் படம் வெளியாகிறது. நம்ம படம் ஓடுமா என்பது எனக்கே சந்தேகமாக உள்ளது என்று கூறியுள்ளார். இதை கேட்ட பஞ்சு அருணாச்சலம், இரண்டு படமும் வெவ்வேறு ஜானர் சார். இரு படங்களும் நன்றாக ஓடம். இது வேற மாதிரி ஓடும் அது வேற மாதிரி ஓடும். ஆனால் இரண்டுமே கலெக்ஷன் எடுக்கும் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ரஜினிகாந்த் அப்படி இரண்டு படங்களும் நன்றாக ஓடி கலெக்ஷன் வந்தது என்றால் உங்களுக்கு நான் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இப்படி ரஜினிகாந்த் வாக்கு கொடுத்து உருவான படம் தான் குரு சிஷ்யன் என்று இயக்குனர் ஏ.வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“