அமரன் திரைப்படக் குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. தீபாவளியன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்த ரஜினிகாந்த், தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக, இப்படத்தைப் பார்த்து தன்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ள வீடியோவை, ராஜ்கமல் நிறுவனம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“