என்னுடைய முதல் இமயமலை பயணத்தில் புது அனுபவம் கிடைத்ததால் ஒவ்வொரு வருடமும் செல்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில் ” அதில் வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது. இமயமலை பயணம் என்பது வழக்கமான ஒன்றுதான். அங்குள்ள ஆலயங்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளேன்” என்றார்.
அப்போது மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா? என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு நோ கமெண்ட்ஸ் என்றார். அதை தொடர்ந்து இசை பெரிதா பாடல் பெரிதா என்ற கேள்வி தமிழ் சினிமா உலகில் எழுந்துள்ளதே உங்கள் கருத்து என்ற கேள்விக்கும் எந்த பதிலும் சொல்லாமல் ‘நோ கமெண்ட்ஸ் “ என்று கூறினார்.
இதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் நடிகர் ரஜினிகாந்திடம் இமயலை பயணம், வேட்டையன் படம், அரசியல் குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது செய்தியாளர் உங்கள் ஆன்மிக பயணத்திற்கு பின் புதிய இந்தியா பிறக்குமா ? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எந்த பதிலும் தராத ரஜினி, வெறும் சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“