சமீபத்தில் நடைபெற்ற இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா படத்தில் டைட்டில பாடலுடன் மேடைக்கு செல்லும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் பாடகர் என பன்முக திறமை கொண்ட தேவா தேனிசை தென்றல் என்ற அடைமொழியுடன் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இதில் குறிப்பாக ரஜினிகாந்த நடிப்பில் வெளியாகி தற்போதுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாட்ஷா படத்திற்கு இசையமைத்தவர் தேவாதான். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், டைட்டில் பாடலான பாடஷா என்று தொடங்கும் பாடல் இன்றளவும் பல ரசிகர்களின் ரிங்டோனாக உள்ளது.
தற்போது தேவா அமைச்சர் என்ற படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில், சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், நடிகர்கள் விஜய் சேதுபதி, மீனா, தயாரிப்பாளர்கள் சுரேஷ் கிருஷ்ணா, வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் தேவா ரஜினிகாந்தின் வாழ்க்கையில் மறக்கமுடியாத சில இசை வெற்றிகளைக் கொடுத்துள்ளார். உண்மையில், தேவாவின் பின்னணி இசையில் இருந்து சூப்பர் ஸ்டாரைப் பிரிப்பது சாத்தியமற்ற நிலையில் உள்ளது. அண்ணாமலை படத்துக்கு தேவா இசையமைத்த இசை, அதன்பிறகு ரஜினிகாந்தின் அனைத்துப் படங்களிலும் முதன்முதலில் அவரது பெயர் திரையில் வரும் போது பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே இந்த விழாவில், பேசிய தேவாவுடனான தனது நீண்ட நாள் தொடர்பைப் பற்றி பேசிய நடிகர் ரஜினிகாந்த், தேவாவின் கேரியரில் அதிகம் அறியப்படாத ஒரு சாதனையை முன்னிலைப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டார் என்று சொல்லாம்.
“சிங்கப்பூர் அதிபர் நாதன் பிறந்து வளர்ந்தது மலேசியாவில் ஆனால் அவருடைய பூர்வீகம் தமிழ்நாட்டில்தான் இருந்தது. அவர் மறைந்தபோது, இயக்குனர் சேரனின் பொற்காலம் படத்திலிருந்து தேவாவின் தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலுடன் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பதே அவரது கடைசி ஆசையாக இருந்தது. உலகம் முழுவதிலும் உள்ள பெரிய தலைவர்கள் முன்னிலையில் அந்த பாடல் ஒலிக்கப்பட்டது.
அந்த பாடல் ஹாங்காங், தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பாடலின் பொருளைத் தங்கள் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க தொலைக்காட்சி சேனல்களால் இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அது எந்த ஊடகத்திலும் குறிப்பிடப்படவில்லை” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“