/tamil-ie/media/media_files/uploads/2023/05/Shobana.jpg)
நடிகை ஷோபனாவின் மானத்தை காப்பாற்றிய ரஜினிகாந்த்
நடிகை ஷோபனா, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்த நடிகை. சந்திரமுகி படத்திற்கு முன்னோடியான மணிசித்திரதாள் படத்தில் சந்திரமுகியாக நடித்து விருது வாங்கியவர் இவர்தான்.
இவர் ரஜினிகாந்த்துடன் தளபதி, சிவா ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது சிவா படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. மழையில் நனையும் காட்சி ஒன்றை படமாக்க நினைத்துள்ளனர். ஆனால் அந்தக் காட்சி தொடர்பாக ஷோபனாவுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லையாம்.
படப்பிடிப்பு தளத்துக்கு ஷோபனா வந்ததும், வெள்ளை சேலையை கொடுத்து காட்சிக்கு தயாராகும்படி கூறியுள்ளனர். அதைப் பார்த்து ஷோபனா அதிர்ச்சி ஆகிவிட்டாரம். ஏனெனில், அதில் மாபெரும் சிக்கல் ஒன்று உள்ளது.
அன்றைய தினம் வெள்ளை ஆடைக்கு ஏற்ற உள்ளாடைகளை அவர் எடுத்துச் செல்லவில்லையாம். இதனால் செய்வதியாமல் தவித்த ஷோபனா, அவசரத்துக்கு தாள்களை வைத்து மேக் செய்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் கட்டிப்பிடிக்கும் காட்சியில் பேப்பர் சப்தம் வந்துள்ளது. இதை காட்டிக் கொள்ளாமல் ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துள்ளார்.
கடைசியாக இதை யாரிடமும் சொல்லாதீர்கள் என ரஜினிகாந்திடம், ஷோபாவும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
தளபதி, சிவா என இரண்டு படத்திலும் ரஜினிகாந்த் ஷோபனா ஜோடி வெகுவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தளபதி படத்தில் வரும் யமுனை கரையிலே, சிவா படத்தில் வரும் அடி வான்மதி போன்ற பாடல்களை இன்றளவும் ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.