/indian-express-tamil/media/media_files/7d9FnEjt8Ts1loI8nl5b.jpg)
நடிகர் ரஜினியின் 169வது படத்தை தொடர்ந்து அவரது 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
Rajini-kanth | chennai-airport: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தார். படம் வெளியாகி சில நாட்களிலே வசூல் சாதனை படைக்க தொடங்கியது. இந்தியாவில் மட்டும் 600 கோடிக்கு மேல் ஜெயிலர் வசூல் செய்துள்ளது. பட தயாரிப்பாளரான கலாநிதிமாறன் படக்குழுவுக்கு பரிசுகளை அள்ளிக் கொடுத்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினியின் 169வது படத்தை தொடர்ந்து அவரது 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகைகள் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டும் வருகிறது.
இந்த நிலையில், தனது 170வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனது 170வது திரைப்படம் நல்ல கருத்துள்ள பிரமாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
“படப்பிடிப்பில் கலந்துகொள்ளச் செல்கிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். ’ஜெயிலர்’ திரைப்படம் நான் எதிர்பார்த்தைவிட பெரிய வெற்றி பெற்றுள்ளது. என்னுடைய 170-வது படம் நல்ல கருத்துள்ள, பிரம்மாண்டமான ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். இதனை ஞானவேல் இயக்குகிறார்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.