/tamil-ie/media/media_files/uploads/2023/08/Rajinikanth-Yogi-Jailer.jpg)
லக்னோ சென்ற ரஜினிகாந்த், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் பான் இந்தியா மூவியாக தியேட்டர்களில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டுக்கொண்டுவருகிறது.
இந்தப் படத்தின் வெற்றியை தலையில் ஏத்திக் கொள்ளாத ரஜினிகாந்த், இமயமலையில் ஆன்மிக பயணத்தில் உள்ளார். அவர் ராஞ்சியில் அம்மாநில கவர்னரையும், இமயமலை பகுதியில் உள்ள பல்வேறு ஆசிரமங்களுக்கும் சென்றிருந்தார்.
இந்த நிலையில் தற்போது உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் படம் பார்க்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளதை ரஜினிகாந்த் உறுதிப்படுத்தி உள்ளார். முன்னதாக செய்தியாளர்கள் அவரிடம் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு யார் காரணம் என கேள்வியெழுப்பினார்கள்.
இதற்கு தனக்கே உரித்தான பாணியில் பதில் அளித்த ரஜினிகாந்த், “இறைவன்தான் காரணம்” என்றார். ரஜினிகாந்தின் இந்தப் பேட்டி தற்போது வைரலாகிவருகிறது.
ஜெயிலர் படத்தில் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமனா, ரம்யா கிருஷ்ணன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் படத்தை இயக்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.