வேட்டையன் படத்தை தொடர்ந்து கூலி என்ற படத்தில் நடிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், நடிகராக ஆவதற்கு முன்பு, பஸ் கண்டக்டராக இருந்தாலும், அதற்கு முன்பு பல வேலைகளை செய்துள்ளதாக ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் நாட்டில் தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேடைகளில் தனது பேச்சு மற்றும் கதைகள் சொல்வதில் நன்கு அறியப்பட்டவர். அவரது படங்கள் வெளியாகும் முன்பு, நிகழ்ச்சியில் அவர் பேசும், நகைச்சுவையான பேச்சுகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேடை பேச்சுக்களை பேச பயிற்சி செய்ய முடிவு செய்ததிலிருந்து இதுதான் ரஜினியின் வழக்கமாக உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க : Rajinikanth worked as a coolie, carpenter and bus conductor, seeing a godman in dream changed his life: ‘I prayed I wanted to be rich’
அந்த வகையில், கடந்த 1992-ம் ஆண்டு லதா ரஜினிகாந்த் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “எங்கள் நாட்டில், உங்களுக்கு தேவையானது நல்ல சொற்பொழிவு திறன் மட்டுமே. அப்படி இருந்தால் உங்களை அரசியல்வாதியாக்கி விடுவார்கள். உங்களுக்கு எந்த தகுதியும் திறமையோ பின்னணியோ தேவையில்லை. அவ்வளவுதான் தேவை. அதனால்தான் நான் அதைக் கற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். ஆனால், ஒவ்வொரு மேடையிலும் பேசத் தெரியாத ஒரே விஷயத்தைச் சொன்னால் சலிப்பாக இருக்கும் என்பதால் கொஞ்சம் கற்றுக் கொள்ள முடிவு செய்தேன்” என்று பேசினார்.
மேலும், நான் ஒரு பஸ் கண்டக்டர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனா அதற்கு முன் நான் ஆபீஸ் பாய், அப்புறம் கூலி, அப்புறம் கார்பெண்டர். அதன் பிறகுதான் கண்டக்டர் ஆனேன். நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் அதையெல்லாம் செய்தேன். ஏழ்மையை நான் பார்த்தோ, கேட்டோ அல்ல அதை அனுபவித்துதான் அறிந்தேன். எனக்கு பணக்காரனாக வேண்டும் என்ற அபார ஆசை இருந்தது.
நான் சிறு வயதில் கூட என் வாழ்க்கையில் எதற்கும் பயந்ததில்லை. ஆனால் ஒருமுறை நான் மிகவும் பயந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். அப்போதுதான் நான் ஒரு கடவுளின் ஓவியத்தைப் பார்த்தேன், மக்கள் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்ததும் அந்த முடிவை வேறொரு நாளுக்குத் தள்ள முடிவு செய்தேன்.
அன்றிரவு நான் ஒரு கனவில் கண்டேன், அங்கு புனிதர் வெள்ளைத் தாடியுடன் தோன்றினார், அவர் ஆற்றின் மறுகரையில் அமர்ந்திருந்தார். இந்தக் கதையை நான் எங்கும் சொல்லவில்லை. நான் பகிர்வது இதுவே முதல் முறை. அவர் என்னை அவரிடம் வரச் சொன்னார், நான் நீந்தவில்லை, ஆனால் அவரிடம் ஓடினேன். அடுத்த நாள், அந்த தெய்வம் யார் என்று நான் கேட்டபோது, அவர் ஸ்ரீ ராகவேந்திரா என்று சொன்னார்கள்.
அவரது மடத்தைக் கண்டுபிடித்து, ஐசுவரியவான் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வியாழன் தோறும் விரதம் இருக்க ஆரம்பித்தேன். பிறகு நான் கண்டக்டராகி, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன், பிறகு பாலச்சந்தர் சாரால் அடையாளம் காணப்பட்டு, நட்சத்திரமாகிவிட்டேன்.. 1978ல் நான் நட்சத்திரம் ஆனபோது மந்த்ராலயம் சென்றேன். நான் கனவில் கண்ட அதே நதியையும் இடத்தையும் பார்த்தேன். அந்த இடத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.
எனக்கு வாழ்த்து கிடைத்தது அதனால், அவரும் தமிழக மக்களும் என்னை நட்சத்திரமாக்கிவிட்டார்கள், அப்படித்தான் ஒரு நடத்துனர் உங்கள் முன் கோட் சூட்டில் நிற்கிறார் என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார். கடவுளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ரஜினிகாந்த் ஸ்ரீ ராகவேந்திரர் (1984) திரைப்படத்தில் டைட்டில் ரோலில் நடித்தார், இது அவரது தொழில் வாழ்க்கையின் 100வது படமாகவும் அமைந்தது. படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியாக மாறியது, ஆனால் ரஜினிகாந்த் பல சந்தர்ப்பங்களில் இதை தனது தனிப்பட்ட விருப்பங்களில் ஒன்றாக குறிப்பிட்டிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“