எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்தின் பேச்சு உண்மையாக இருந்தது என நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலை கழகத்தில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினர், ரஜினிகாந்த். அப்போது, ‘நான் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. ஆனால் அவர் கொடுத்த நல்ல ஆட்சியைக் கொடுக்க முடியும்’ என்று சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொன்னார். ரஜினியின் பேச்சு பல்வேறு தரப்பில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இது குறித்து டிவிட்டரில் நகைச்சுவை நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
'’ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, MGRபுகழாரம்!இவை உண்மையாக இருந்தது.இருப்பினும் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்!’’
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் பேச்சு உண்மையாக இருந்தது : நடிகர் விவேக் கருத்து
ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, MGRபுகழாரம்!இவை உண்மையாக இருந்தது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
Follow Us
எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்தின் பேச்சு உண்மையாக இருந்தது என நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலை கழகத்தில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினர், ரஜினிகாந்த். அப்போது, ‘நான் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. ஆனால் அவர் கொடுத்த நல்ல ஆட்சியைக் கொடுக்க முடியும்’ என்று சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொன்னார். ரஜினியின் பேச்சு பல்வேறு தரப்பில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இது குறித்து டிவிட்டரில் நகைச்சுவை நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
'’ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, MGRபுகழாரம்!இவை உண்மையாக இருந்தது.இருப்பினும் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்!’’
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.