Advertisment

இதை நினைத்து ரொம்ப கஷ்டப்படுறேன்; விஜயகாந்த் நினைவிடத்தில் ரம்பா பேட்டி

கேப்டன் விஜயகாந்த் மறைவு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போயிடுவாருனு நினைக்கல; விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் நடிகை ரம்பா பேட்டி

author-image
WebDesk
New Update
rambha vijayakanth

அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போயிடுவாருனு நினைக்கல; விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் நடிகை ரம்பா பேட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மறைந்த நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உருவப் படத்திற்கு அவரது இல்லத்தில் நடிகை ரம்பா அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

மேலும், விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாத அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து, விஜயகாந்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ரம்பா தனது கணவருடன், விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி விஜயகாந்தின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரம்பா, ”கேப்டன் விஜயகாந்த் மறைவு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போயிடுவாருனு நினைக்கல. விஜயகாந்த் ரொம்ப நல்ல மனிதர். சூட்டிங் ஸ்பாட்டில் அப்படி கவனித்துக் கொள்வார். என்னைப் நல்ல பார்த்துச் சொல்லி, எனக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி என் பெற்றோருக்கு அட்வைஸ் பண்ணாரு. நடிகர் சங்க நிகழ்ச்சியின்போது எனக்கு அடிப்பட்டது. அப்போது என்னை சிறப்பாக கவனித்துக் கொண்டார்.

அவர் உயிரோடு இருக்கும்போது என்னால் வந்து பார்க்க முடியலனு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இதை நினைச்சி நினைச்சி, எனக்கு வாழ்க்கை முழுவதும் கஷ்டமா தான் இருக்கும். அவர் எந்த உலகத்தில் இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும். கேப்டன் இவ்வளவு பேருக்கு சாப்பாடு போட்டுருக்கானு சொல்லும் போது, ரொம்ப பெருமையா இருக்கு. விஜயகாந்த் எப்போதும் நம் இதயங்களில் வாழ்வார்,” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth rambha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment