ராஜா ராணி சீரியலில் சந்தியாவாக நடித்து வந்த ஆல்யா மானசா விலகியதை தொடர்ந்து தற்போது வில்லியாக நடித்து வரும் விஜே அர்ச்சனாவும் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முன்னணி சேனலான விஜய் டிவியில் பல சீரியல்கள் சீசன் 2-வாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலின் சீசன் 2 பெரும் எதிர்பார்ப்புடன் அரங்கேறி வருகிறது
முதல் சீசனில் நாயகியாக நடித்த ஆல்யா மானசா இந்த சீரியலிலும் நாயகியாக நடித்து வந்த சிலையில் நடிகர் சித்து நாயகனாக நடித்து வருகிறார். இதில் வில்லி ரோலில விஜே அர்ச்சனா நடித்து வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆல்யா மானசா தனது 2-வது பிரசவம் காரணமாக சீரியலில் இருந்து விலகினார்.
ஆல்யாவின் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவருக்கு பதிலாக வந்த ரியா விஸ்வநாத் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஆதியின் காதல் தொடர்பான எபிசோடுகள் பரபரப்பாகி வரும் நிலையில், அர்ச்சனாவின் வளைகாப்பு நிகழ்வுகள் அரங்கேறியது. இதனிடையே வில்லி அர்ச்சனாவாக நடித்து வரும் விஜே அர்ச்சான தற்போது சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜா ராணி சீசன் 2 மூலம் தனது சீரியல் பயணத்தை தொடங்கிய அர்ச்சனா முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதை வென்றார். மேலும் சிறந்த வில்லிக்கான விஜய்டிவியின் விருதையும் வென்றிருந்தார். ஆனால் தற்போது அர்ச்சனா திடீரென சீரியலை விட்டு விலவுள்ளதாக வெளியாகன செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அர்ச்சனாவும் பாரதி கண்ணம்மா சீரியலின் அருண்பிரசாத்தும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படும் நிலையில், திருமணத்திற்காகத்தான் அர்ச்சனா சீரியலை விட்டு விலகுகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே இனி அர்ச்சனா ரோலில் ஈரமான ரோஜாவே சீரியலின் அர்ச்சனா குமார் நடிகக் இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது..
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.