/indian-express-tamil/media/media_files/T5Uw11UFsYTrqcQMozkN.jpg)
பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில் ரியாலிட்டி ஷோ பிரபலம் ஷியாஸ் கரீம் சென்னை விமான நிலையத்தில் கைது
பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில் ரியாலிட்டி ஷோ பிரபலம் ஷியாஸ் கரீம் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கேரள காவல்துறையால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட ஷியாஸ் கரீம், துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் கைது செய்யப்பட்டார்.
பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்கில் சிக்கியுள்ள மலையாள நடிகரும், ரியாலிட்டி ஷோ பிரபலமான ஷியாஸ் கரீம், அக்டோபர் 5-ம் தேதி காலை சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஸ்டார் மேஜிக், பிக் பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிர்பலமானவர் ஷியாஸ் கரீம். சமீபத்தில், கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஷியாஸ் கரீம் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், காசர்கோடு சந்தேரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
இதனிடையே, அவர் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில், ஷியாஸ் கரீம் தலைமறைவானார். இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு லுக் அவுட் நோட்டீஸை போலீசார் வெளியிட்டனர். மேலும், விசாரணை தொடர்பாக அவர் தேடப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஷியாஸ் கரீம் வியாழக்கிழமை துபாயிலிருந்து வந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்டார். அவர் வந்தவுடன், குடியேற்ற அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி, சந்தேரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவரை கேரளாவுக்கு அழைத்துச் செல்ல சந்தேரா போலீஸ் குழு ஒன்று சென்னை வர உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில் ரியாலிட்டி ஷோ பிரபலம் ஷியாஸ் கரீம் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.