திருவிளையாடல் படத்தில் வரும் வசனத்தின்படி சொல்ல வேண்டுமானால் பிரிக்க முடியாதது என்றால் அது பெண்களும், டிவி சீரியல்களும் தான். அவர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபமாக, விஜய், ஜீ, கலர்ஸ் என அத்தனை தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு புது சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
அந்தவகையில், ஜீ தமிழ் டிவி தனது பார்வையாளர்களை மகிழ்விக்க பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் மட்டும் அன்பே சிவம், கண்ணத்தில் முத்தமிட்டால், பேரன்பு, ரஜினி என ஏராளமான புது சீரியல்கள், ஜீ தமிழ் டிவியில், ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் ஜீ தமிழ் டிவிக்கும், மற்ற சேனல்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இப்போது ஜீ தமிழ் டிவி புதிய சீரியலை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே பூவே பூச்சுட வா சீரியலில் நடித்து பிரபலமான ரேஷ்மா முரளிதரன் இந்த புதிய சீரியல் மூலம் மீண்டும் ஜீ தமிழ் டிவிக்கு திரும்புவார் என சின்னத்திரை வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன. ஆனால் இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை.
ஜீ தமிழ் டிவியின்’ டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியின் மூலம் ரேஷ்மா சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து’ பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கேரெக்டர் மூலம் சீரியல் உலகில் என்ட்ரி ஆனார் ரேஷ்மா. அதில் அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ரேஷ்மாவுக்கும், மதனுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது. தற்போது அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர். ரேஷ்மாவின் அம்மாவும் டெய்லர் என்பதால் அபி டெய்லர் சீரியல் அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. சமீபத்தில் ரேஷ்மா’ தன் கணவர் மதனுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“