/indian-express-tamil/media/media_files/SnBmNGSg6VaCCeo6dQ6q.jpg)
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி
தெலுங்கு சினிமாவில் பல நல்ல திரைப்படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள்தான் பிரபல சின்னத்திரை நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் ஜீ தமிழ் டிவியில் சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்திலு கலக்கிவருகிறார்.
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ரேஷ்மா, அமெரிக்காவில் டெக்ஸஸ் நகரில் தனது பட்டப்படிப்பை முடித்தவர். சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.
ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘மசாலா படம்’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் ‘புஷ்பா’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ரேஷ்மாவுக்கு இந்த படம் மிகப் பெரிய வரவேற்பையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, சீரியல்களில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் ஜீ தமிழ் டிவியில் சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியிடம் அவருடைய உதடு பெரிதாக இருக்க காரணம் என்ன என்று சர்ச்சையான ஒரு கேள்வியை முன்வைத்த பொழுது, “அது என்னுடைய உதடு, அதை பெரிதாக்கிகொள்வதும், சிறிதாக்கிக்கொள்வதும் எனது விருப்பம், ஆப்ரேஷன் செய்து தான் அதை எப்படி மாற்றிக் கொண்டேன், அதனால் உங்களுக்கு என்ன?” என்று அதிரடியாக பதில் அளித்து அனைவரின் வாயை அடைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.