ரூ. 1000 கோடி கன்பாஃர்ம்... வசூல் வேட்டையில் காந்தாரா சாப்டர் 1; 6-வது நாளில் கலெக்ஷன் இத்தனை கோடி!

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் கோடிக்கணக்கில் வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் கோடிக்கணக்கில் வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
kantara

நடிகர், இயக்குநர், கதையாசிரியர் என்ற பன்முகத் தன்மை கொண்ட ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார். 'துக்ளக்’, ‘உலிதவரு கண்டந்தே’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘ரிக்கி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘கிரிக் பார்ட்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

Advertisment

ரிஷப் ஷெட்டி இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, இவர் கடந்த  2022-ஆம் ஆண்டு ‘காந்தாரா’ திரைப்படத்தை இயக்கி நடிக்கவும் செய்தார். இப்படம் முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பான் இந்தியா மொழியில் டப் செய்யப்பட்டு திரையிடப்பட்ட நிலையில் வசூலை குவித்தது.

ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ‘காந்தாரா’ திரைப்படம் முதலில் சீக்குவலாக வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் ப்ரீக்குவல் வெளியாகி உள்ளது. அதாவது ‘காந்தாரா சாப்டர் 1’  அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகி வசூலை குவித்து வருகிறது.

இப்படம் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்து ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. வரும் நாட்களில் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின்  வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலக அளவில் ரூ. 427.5 கோடியை வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் ரூ.1000 கோடி வசூல் செய்துவிடும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்தப் படத்தின் சம்பளத்தைப் பொறுத்தவரை, முதல் பாகத்தில் நாயகனாகவும், இயக்குநராகவும் நடித்த ரிஷப் ஷெட்டி ரூ.4 கோடி மட்டுமே வாங்கியதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த முறை, லாபத்தில் ஒரு பங்கை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரிஷப் ஷெட்டியுடன் நடித்த ருக்மிணி வசந்த், ஜெயராம், மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: