Advertisment

ரோஜா சீரியல் நடிகருக்கு ஆண் உறுப்பு நீக்கம்: இந்த நிலைமை யாருக்கும் வரக் கூடாது... கண்ணீர் கதை!

சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சக்ரவர்த்தி, இவருக்கு ஆண் உறுப்பு அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chakravarthi 1

ரோஜா சீரியல் நடிகர் சக்ரவர்த்தி மாநிலத்தில் முதல் இடைநிலை பாலினத்தவர் என சான்றிதழ் பெற்றுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சக்ரவர்த்தி, இவருக்கு ஆண் உறுப்பு அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இவர் தமிழக அரசால் இடை பாலினத்தவர் என்ற சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

Advertisment

ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சக்கவர்த்தி, இவர் தனது ஆணுறுப்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளார். ஒரே உடலில் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் உடலியல் பிரச்னையால்  பாதிக்கப்பட்டுள்ள சக்ரவர்த்தி தனது கண்ணீர் கதையைப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் சக்ரவர்த்தி சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சில நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கி உள்ளார்.

Chakravarthi 2

ஆண் என்ற பெண் இரு பாலினத்தவர்கள் மட்டுமல்லாமல், மாற்றுப் பாலினத்தவர்கள் (Transegenders) இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆணாகப் பிறந்து உடலில் பெண் தன்மை உணர்ந்து பெண்ணாக மாறுபவர்கள் திருநங்கைகள் என்றும்  பெண்ணாகப் பிறந்து தன்னை ஆணாக உணர்ந்து பின்னர் ஆணாக மாறுபவர்கள் திருநம்பி என்றும் அழைக்கப்படுகின்றனர். இதற்கு அறுவை சிகிச்சைகளும் செய்துகொள்கின்றனர்.

அதே போல, சமீப காலமாகத்தான் சமூகத்தில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது. மேலும், எல்.ஜி.பி.டிக்யூ சமூகங்கள் பற்றிய புரிதலும் தொடங்கியுள்ளது.

இவற்றில் இருந்து மாறுபட்டு, லட்சத்தில் ஒருவருக்கு இருக்கக் கூடிய உடலியல் பிரச்னை நடிகர் சக்ரவர்த்திக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி என்ன பிரச்னை என்றால், ஒரே உடம்பில் ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பதால் தனது வாழ்க்கையில் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூகத்திலும் சந்தித்த வேதனைகளைப் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அது எந்த அளவுக்கு வேதனையானது என்றால், நடிகர் சக்ரவர்த்திக்கு ஆணுறுப்பில் விந்துவும் மாதவிடாயும் வெளியேற,  இப்போது ஆணுறுப்பை அகற்றி அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். மேலும், தான் அனுபவித்த கஷ்டங்களையும் தனது உடலைப் புரிந்துகொள்வதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Chakravarthi 3

இது போல உடலியல் பிரச்னை லட்சத்தில் ஒருவருக்குதான் காணப்படும், அப்படி நடிகர் சக்கரவர்த்திக்கும் ஏற்பட்டுள்ளது. இவருக்கு பத்தரை வயது இருக்கும்போது சக்கரவர்த்தியின் உடலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. அவருடைய ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வந்திருக்கிறது. சக்ரவர்த்தி அதை தன்னுடைய அம்மாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவருடைய அம்மா ஏதாவது அடிபட்டு இருக்கும் என்று சொல்லி ஆறுதல் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு பிறகும் தொடர்ந்து,  ஆணுறுப்பில் ரத்தம் வருவது தொடர்ந்ததால், மருத்துவரிடம் சென்று பார்த்திருக்கிறார்கள். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உங்களுக்கு கர்ப்பபை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டு, சக்ரவர்த்தியும் அவருடைய அம்மாவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

கர்ப்பப்பை இருப்பதால், சக்ரவர்த்தி பெண்ணாகத்தான் இருக்கிறார் என்று மருத்துவர்கள் சொல்லி அனுப்பி உள்ளனர். ஆனால், சில வருடங்கள் கழித்து அவருடைய ஆணுறுப்பில் இருந்து விந்து வெளியாகியிருக்கிறது. அதற்கு பிறகு தான், சக்ரவர்த்தி உடலியல் ரீதியாக ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும் விஷயம் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. சக்ரவர்த்தியின் உடலியல் ரீதியான பிரச்னைகளைத் தெரிந்து கொண்ட இவருடைய பள்ளியில் படிக்கும் நண்பர்கள்கூட பலர் இவரிடம் தப்பாக நடப்பதற்கு முயற்சி செய்து கிண்டல் செய்து அவமானப்படுத்தி இருக்கின்றனர்.

ஆனால், சக்ரவர்த்தியின் அம்மா அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சக்ரவர்த்திக்கு திருமணம் செய்து வைத்தாலும் சரிப்பட்டு வராது, ஒரு ஆணை திருமணம் செய்தாலும் அதுவும் முடியாது. பெண்ணையும் திருமணம் செய்து வைக்கவும் முடியாது என்று யோசித்துக் கூறியிருக்கிறார். 

Chakravarthi 4

சக்ரவர்த்தியின் உடலில் கர்ப்பப்பை இருப்பதால், ஒவ்வொரு மாதமும் அவருடைய ஆணுறுப்பின் வழியாக சிறுநீரும், அதே வழியாக மாதவிடாயும் வெளியேறுவதால் சக்ரவர்த்தி கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால், கர்ப்பபையை அறுவை சிகிச்சை செய்து அகற்றி இருக்கிறார்.

கர்ப்பப்பை அகற்றப்பட்டதால்,பின்னாளில் புற்றுநோய் பாதிப்பு வந்து விடக்கூடாது என்று இவருடைய ஆணுறுப்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விட்டார்களாம். அதற்குப் பிறகு, பல வருடங்களாக வேதனையை அனுபவித்து வந்த சக்கரவர்த்தி தன்னைப் போல இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். தனது உடலியல் பிரச்னையை பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.  இப்படியான உடல்நலப் பிரச்னை இருப்பதால்,சக்ரவர்த்திக்கு நடிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.

இந்த நிலையில், நடிகர் சக்ரவர்த்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அந்த பேட்டியில், தனக்கு ஆரம்பத்தில் இருந்தே பல உடல்நிலை பிரச்சனைகள் வந்திருந்தாலும் 38 வயதில் தான் நான் இடை பாலினத்தவர் என்று சொல்லப்படும் நபர் என்பது தெரிய வந்தது. அதுவும் ஒரு நபரை நான் பேட்டி எடுத்துக் கொண்டு இருக்கும்போது அவர் சொன்ன சில தகவல்கள் எனக்கு பல கேள்விகளுக்கு விடையாக அமைந்தது.

அதற்குப் பிறகு தன்னுடைய உணர்வுகள் ஏன் இப்படி இருக்கிறது? எதனால் தன்னுடைய உடம்புக்குள் இப்படி மாற்றம் ஏற்படுகிறது என்பதை இன்டர்நெட்டில் தேடிப் படித்து தெரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த உடலியல் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டிருந்தால் தானும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும். அதனால், யாரும் உடலில் சிறு பிரச்சனை என்றாலும் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடாதீர்கள் என்று கூறி இருக்கிறார்.

அதோடு, தனக்கு இப்போது ஆணுறுப்பு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டிருக்கிறது. அதனால், பல இன்னல்கள் இருக்கிறது. ஆனாலும், 99% வெற்றிகரமாக நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் இருக்கும் நாட்களையும் நல்லபடியாக வாழ்ந்து விட்டு போய்விட வேண்டும் என்று நினைப்பதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தன்னைப்போல பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அவர்களுக்கான விழிப்புணர்வை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

சக்ரவர்த்தி தொடர்ச்சியாக ஆபரேஷன்கள் செய்து கொண்டிருக்கும் போது அவருடைய தலை முடி, தாடி, மீசை எல்லாம் உதிர்ந்துள்ளது. அப்போது அவர் வேலை பார்த்த டிவி சேனலில், அவரை இந்த மாதிரி பார்க்க அருவருப்பாக இருக்கிறது என்று கூறி அவமதித்திருக்கிறார்கள்.

இதற்கு பிறகு, சக்ரவர்த்தி இதை டாக்டரிடம் கூறி ஊசி போட்டு தாடி மீசையை மீண்டும் வளர வைத்திருக்கிறார். ஆனால், அதுவும் நீண்ட நாட்கள் இருக்காது என்று மருத்துவர் கூறியிருக்கிறார். இப்படி, உடலியல் ரீதியான பிரச்னைகளை மட்டுமல்லாமல், அதனால், சமூகத்தில் வேதனைகளையும் சந்தித்த சக்ரவர்த்தி, இருக்கிற நாளை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்று நினைப்பதாக கூறியுள்ளார். நடிகர் சக்ரவர்த்தி இத்தனை வலிகளையும் மனதிற்குள் வைத்துக்கொண்டு தனது வேதனைகளை எல்லாம் புன்னகையுடன் பேட்டி அளித்திருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment