/tamil-ie/media/media_files/uploads/2022/06/Priyanka.jpg)
சன் டி.வி.யின் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி திருமண கோலத்தில் தனது பெற்றோர்களுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. தொடர்ந்து 2014-ம் ஆண்டு தெலுங்கில், மகமாலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி வைத்த பிரியங்கா நல்காரி, தெலுங்கிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Priyanka.jpg)
இதனையடுத்து தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிரியங்கா தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Priyanka-1.jpg)
இந்த சீரியல் மூலம் பிரியங்கா என்ற இவரது உண்மையான பெயர் மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைக்கின்றனர். அந்த அளவிற்கு ரோஜா கேரக்டருக்கு பிரியங்கா உயிர் கொடுத்துள்ளார். சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்ளகில் ஆக்டீவாக இருக்கும் இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் திருமண கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் அவரது தங்கை பாவனா நல்காரியின் திருமணத்தில் எடுத்ததுள்ளார். தங்கை திருமணத்தில் தானும் மணப்பெண் போல் பிரியங்கா உடை அணிந்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Priyanka2.jpg)
அக்கா பிரியங்கா நல்காரி இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில். தங்கைக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் பிரியங்காவுக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த திருமணம் நின்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.