லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரில் கடந்த 2020ம் ஆண்டு லிப்ரா புரொடக்ஷன் ப்ரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் அறிமுகம் ஆகி நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த திட்டத்தின் மதிப்பு ரூ.200 கோடி என்றும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகள் கூறி, மேற்படி திட்டம் ஆரம்பிக்க போலியான ஆவணங்களை காண்பித்து தன்னை நம்பவைத்து ரூ.16 கோடி வரை முதலீடு செய்ய வைத்து, power project திட்டத்தை ஆரம்பிக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாகவும் எனவே மோசடி செய்த ரவீந்தர் மீது நடடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு,நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவில் ( 15101) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்தது.
புலன் விசாரணையில் லிப்ரா புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த ரவீந்தர் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலியான ஆவணங்களை காண்பித்து அதனை உண்மை என நம்ப வைத்து பாலாஜி கபாவிடம் ரூ. 15,8,32,000 பெற்றுக்கொண்டு பவர் ப்ராஜெட் திட்டத்தை ஆரம்பிக்கமாலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியது புலன் விசாரணையில் தெரிய வந்தது. இவ்வழக்கில் தொடர்படைய ரவீந்தர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“