Advertisment

அஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் - எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்!

Vijay - Ajith: ஒவ்வொரு நடிகரும் தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
S.A.Chandra Sekar on Thalapathy Vijay's bigil audio launch issue

எஸ்.ஏ.சந்திர சேகர்

S.A.Chandra Sekar on Nerkonda Paarvai: நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், 'டூரிங் டாக்கீஸ்' திரைப்படத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா உள்ளிட்டோர் நடித்து வரும் அந்தப் படத்திற்கு ‘கேப்மாரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

அண்மையில் நடந்த ஒரு நேர்க்காணலில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையேயான சண்டை குறித்து அரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்திரசேகர், ”தலயும் தளபதியும் நண்பர்கள், அவர்கள் இருவரும் ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் செல்கிறார்கள், ரசிகர்கள் அவர்களை கடவுளைப் போல் கருதுவதால், யாரேனும் அவர்களை தாக்கி பேசும்போது ரசிகர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இதை நான் விரும்புவதில்லை” என்றார்.

மேலும் குறிப்பிட்ட சந்திர சேகர், விஜய் - அஜித் நடித்த ”ராஜாவின் பர்வையிலே” படப்பிடிப்பின் போது அவரது மனைவி ஷோபா அஜித்துக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தார் என்றும், அஜித்தின் படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்ப்பதை ஷோபா வழக்கமாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு, அஜித்தின் ’நேர் கொண்டா பார்வை’யைப் பார்த்த அவர், அந்தத் திரைப்படத்தைப் பாராட்டியதாகவும், பின்னர் நானும் பார்த்தேன் என்றார்.

தனது இமேஜைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்,  சமுதாயத்திற்காக ’நேர்க்கொண்ட பார்வையில்’ நடித்ததை பாராட்டிய எஸ்.ஏ.சி, ஒவ்வொரு நடிகரும் தங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். மேலும், விஸ்வாசம் படத்தில் தந்தை-மகள் பிணைப்பைப் பார்த்து, தனது மகள் வித்யாவின் நினைவு வந்து அழுததாகவும் தெரிவித்துள்ளார்.

Tamil Cinema Actor Vijay Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment