Salman Khan: செல்ஃபி எடுக்க தன்னை அணுகிய ரசிகரிடம், நடிகர் சல்மான் கான் நடந்துக் கொண்ட விதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை தயாரிப்பாளர் ரமேஷ் தவுரானி அளித்த தீபாவளி பார்ட்டியில் நடந்திருக்கிறது.
வீடியோவில் ரசிகர் ஒருவர், சல்மான் கான் நடந்து வரும் போது, செல்ஃபி எடுப்போமோ மாட்டோமா என்ற குழப்பத்தில் அவரை நோக்கி நடந்து வருகிறார். ரசிகரின் கையில் ரெடியாக இருக்கிறது செல்ஃபோன். ஆனால், உடனே அந்த ரசிகர் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார். இதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி, சாயி மஞ்ரேக்கரை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் சல்மான். நடிகர் மகேஷ் மஞ்ரேக்கரின் மகளான சாயி, ‘தபாங் 3’ படத்தில் சல்மானுடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்த விருந்தில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா, சாகிப் சலீம், ஆயுஷ் சர்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ரசிகரை ஏமாற்றிய சல்மான் கான் குறித்து, பல ரசிகர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருப்பினும், செக்யூரிட்டி ஃபோர்ஸை தாண்டி திடீரென கண்ணுக்கு முன் வந்து நின்ற அந்த ரசிகரைப் பார்த்து, எதேச்சையாக சல்மான் பயந்திருக்கலாம். தன் ரசிகர்களிடம் கோபத்தை வெளிப்படுத்த அவருக்கு முழு உரிமை உண்டு என்கிறார்கள், மற்றும் பலர்.
சல்மான் கேமரா மூலம் அதிகமான சர்ச்சைகளில் சிக்கியுள்ளார், நிறைய பொது இடங்களில் தனது மனநிலையை இழந்துள்ளார். அவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் இந்த சீசனுக்கான வெளியீட்டு விழாவில் கூட கோபமானார். சல்மான் கானின் சர்ச்சையான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்புவது வாடிக்கையாகிவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.