இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ’வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி.
‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' பாடலில் அவரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகியப் படங்களில் நடித்தார்.
பின்னர் 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு 2015-ம் ஆண்டு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார். 9 மாத கர்ப்பத்தோடு அவர் எடுத்துக் கொண்ட படங்கள் தான் தற்போதைய வைரல். அப்படி என்ன படம் என்கிறீர்களா? நீச்சல் உடையில் தண்ணீருக்குள் அவர் எடுத்துக் கொண்ட விதவிதமான படங்கள் தான் அவை.
இவற்றை சமீரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட, கொஞ்ச நேரத்தில் வைரலாக ஆரம்பித்திருக்கின்றன.
”எனது 9-வது மாத கர்ப்பத்தைக் கொண்டாட விரும்பினேன். பாதிக்கப்படக்கூடிய, சோர்வு, பயம், உற்சாகம் இவற்றை நாம் உணரும் தருணங்கள் மிக அழகானவை. இதை நான் உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் இந்தப் படங்களை வெளியிட்டிருக்கிறார் சமீரா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.