ஒரு பாட்டு தரேன்... பிடிச்சிருந்தா ஓகே இல்லனா நான் கிளம்புறேன்: ரஜினியிடம் கண்டிஷன் போட்ட இசை அமைப்பாளர்!

கபாலி திரைப்படம் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது குறித்து கூறியுள்ளார்.

கபாலி திரைப்படம் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது குறித்து கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pa Ranjiths act has angered Rajinikanth fans

"கபாலி" திரைப்படத்திற்காக ரஜினிகாந்தை முதன்முதலில் சந்தித்தபோது, தான் அவரிடம் கேட்டுக்கொண்டது சுதந்திரம் மட்டுமே என்று சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார். ஒரு பாடலை உருவாக்கி காண்பிக்கிறேன் என்றும், அது ரஜினிகாந்துக்கு பிடித்திருந்தால் முழுச் சுதந்திரத்துடன் செய்வேன் என்றும், பிடிக்கவில்லை என்றால், "குளோரியஸ் எக்ஸிட்" சொல்வது போல, "எனக்கு வரவில்லை, நான் போகிறேன். அழைத்ததற்கு மிக்க நன்றி. அடுத்த முறை சிறப்பாகச் செய்யலாம்" என்று கூறிவிட்டுச் சென்றுவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

ரஜினிகாந்த் அவருக்குப் பிடித்திருக்கிறது என்று சொன்னதும், "என்ன வேண்டும்?" என்று கேட்டிருக்கிறார். அப்போது சந்தோஷ் நாராயணன், "சார், இவ்வளவு பெரிய மேடை இது. நீங்கள் அழுத்தம் கொடுத்தால், நான் மோசமாகச் செய்துவிடுவேன். நீங்கள் சுதந்திரமாக விட்டால், நான் என்னால் முடிந்த சிறந்ததைச் செய்வேன். அது நன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வேறு ஒன்றைச் செய்வேன். நீங்கள் அந்தச் சுதந்திரத்தை மட்டும் கொடுங்கள் சார்" என்றும் கூறியுள்ளார். 

அதற்கு ரஜினிகாந்த், "அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் செய்வதுதான். என்னால் அப்படி எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டேன்" என்று கூறியிருக்கிறார். ரஜினிகாந்தின் இந்தச் சுதந்திரம் அளித்ததால்தான் அந்தப் பாடலை சிறப்பாகச் செய்ய முடிந்தது என்றும் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார். 

Rajinikanth Santhosh Narayanan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: