ஒரு பாட்டு தரேன்... பிடிச்சிருந்தா ஓகே இல்லனா நான் கிளம்புறேன்: ரஜினியிடம் கண்டிஷன் போட்ட இசை அமைப்பாளர்!

கபாலி திரைப்படம் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது குறித்து கூறியுள்ளார்.

கபாலி திரைப்படம் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது குறித்து கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pa Ranjiths act has angered Rajinikanth fans

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு சமூக அரசியல் ஆக்‌ஷன் திரைப்படமாகும். இதை பா. ரஞ்சித் எழுதி இயக்க, கலைப்புலி எஸ். தாணு தயாரித்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ராதிகா ஆப்தே, சாய் தன்ஷிகா போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

Advertisment

இந்நிலையில் படத்தில் பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'கபாலி' திரைப்படத்திற்காக முதன்முதலில் சந்தித்தபோது தனக்கு சுதந்திரம் மட்டுமே வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகப் பகிர்ந்துள்ளார். 

இது குறித்து அவர் விரிவாகப் பேசுகையில், ஒரு பாடலை உருவாக்கி ரஜினிகாந்திடம் காண்பிப்பேன் என்றும், அது அவருக்குப் பிடித்திருந்தால், முழுமையான சுதந்திரத்துடன் அந்தப் படத்திற்கு இசையமைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை தான் உருவாக்கிய பாடல் ரஜினிகாந்திற்குப் பிடிக்கவில்லை என்றால், "எனக்கு வரவில்லை, நான் போகிறேன். அழைத்ததற்கு மிக்க நன்றி. அடுத்த முறை சிறப்பாகச் செய்யலாம்" என்று கூறிவிட்டு, ஒரு 'குளோரியஸ் எக்ஸிட்' போல வெளியேறிவிடுவேன் என்று துணிச்சலாகக் கூறியிருக்கிறார்.

Advertisment
Advertisements

சந்தோஷ் நாராயணன் உருவாக்கி காண்பித்த பாடல் ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்துப் போனது. உடனே ரஜினிகாந்த், "என்ன வேண்டும்?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு சந்தோஷ் நாராயணன், "சார், இவ்வளவு பெரிய மேடை இது. நீங்கள் அழுத்தம் கொடுத்தால், நான் மோசமாகச் செய்துவிடுவேன்.

நீங்கள் சுதந்திரமாக விட்டால், என்னால் முடிந்த சிறந்ததைச் செய்வேன். அது நன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வேறு ஒன்றைச் செய்வேன். நீங்கள் அந்தச் சுதந்திரத்தை மட்டும் கொடுங்கள் சார்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் படங்களுக்கே உரிய வழக்கமான இசையமைப்பில் இருந்து விலகி, தனது தனித்துவமான பாணியில் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்து பெரும் வரவேற்பைப் பெற்றார். தனக்கு அளித்த முழுமையான சுதந்திரமே, 'கபாலி' படத்திற்குச் சிறப்பாக இசையமைக்கக் காரணம் என்று சந்தோஷ் நாராயணன் பலமுறை குறிப்பிட்டுள்ளார். 

Rajinikanth Santhosh Narayanan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: