'சரிகமப' மூலம் கோரிக்கை வைத்த மாணவி; ஆக்ஷனில் இறங்கி நிறைவேற்றிய தமிழக அரசு

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அம்மணப்பாக்கம் ஊருக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அம்மணப்பாக்கம் ஊருக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sarega

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 என்ற இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். 

Advertisment

நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி சரண், ஸ்வேதா மோகன் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். 20-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உள்ளனர். இதில், விழுப்புரம் மாவட்டம்  அம்மணப்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த  தர்ஷினி என்பவரும்  போட்டியாளராக உள்ளார். 

60 முதல் 70 குடும்பங்கள் வாழும் இந்த ஊரில் முறையான பேருந்து வசதி இல்லை. பள்ளிக்கு செல்ல தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது என்று ஜீ தமிழின் சரிகமப மேடையில் மிகுந்த வருத்தத்துடன் தர்ஷினி கூறினார். 

Advertisment
Advertisements

தொடர்ந்து தங்கள் ஊருக்கு தமிழக அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.  இதையடுத்து இன்று டிசம்பர் 5 போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்  அம்மணப்பாக்கம் ஊருக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி அதை  கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: