இதற்கும் மேல் இப்படி ஆச்சு..... செம்ம டென்ஷன் ஆகிய இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ்!
செம்ம கோவத்தில் இருக்கும் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சர்கார் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு கருமையான எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் சர்கார். இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. துப்பாக்கி, கத்தி வெற்றியைத் தொடர்ந்து விஜய் -முருகதாஸ் இணையும் மூன்றாவது படமான சர்கார் மீது பெருத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் எச்சரிக்கை :
ரிலீசுக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் நடிகைகள் பல வலைதள சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்து சர்கார் படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
Dear Sarkar Cast n Crew,
So many people have put their hardwork for the making of this movie. Despite, there are many interviews by Junior artists, which is unethical. In the future, strict legal actions will be taken against people who give interviews without our consent.— A.R.Murugadoss (@ARMurugadoss) 5 October 2018
இதனால் படம் பார்க்கும் போது சுவாரசியம் குறைந்து விடும் என நினைக்கும் இயக்குனர் முருகதாஸ் தனது டிவிட்டர் மூலம் சர்கார் படத்தில் நடித்த நடிகர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில் ’சர்கார் படத்தில் பலபேர் தங்கள் உழைப்பைக் கொட்டியுள்ளனர். சில நடிகர்கள் தன்னிச்சையாக பேட்டிகளைக் கொடுத்து வருகின்றனர். இது நியாயமான செயல் இல்லை. இனிமேல் எங்களுக்கு தெரிவிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.