4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் நடிகர் சத்யராஜின் மனைவி: மகளின் அதிர்ச்சிகர பதிவு

நடிகர் சத்யராஜின் மனைவி மகேஷ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பதாக அவரது மகள் திவ்யா தெரிவித்துள்ளார். இத்தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Sathyaraj and divya

நடிகர் சத்யராஜின் மனைவி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக அவரது மகள் திவ்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார்.

இவரது மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். தனது தொழில் மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் திவ்யா, அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அதில், தனது தாயார் கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, "சிங்கிள் பேரன்டாக இருப்பவர்கள் அனைவருக்கும் பாராட்டு பதிவு இது. எனது தாயார் கடந்த 4 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ளார். வீட்டில் வைத்தே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழாய் மூலமாக தான் அவருக்கு உணவு வழங்கப்படுகிறது. இதனால், நாங்கள் மனமுடைந்து இருக்கிறோம். எனினும், மருத்துவ ரீதியான முன்னேற்றத்திற்காக நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

Advertisment
Advertisements

எனது தாயார் மீண்டு வருவார். கடந்த 4 ஆண்டுகளாக என் தந்தை சிங்கிள் பேரன்டாகவே இருக்கிறார். என் அப்பாவாவின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். அதிலிருந்து என் தந்தையை அவரது தாயார் போன்று நான் கவனித்து வருகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த தகவல் திரைத்துறையினர் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியடைச் செய்தது. 

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Cinema Sathyaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: