Priya Raman: ’ஜி தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலில் அகிலாண்டேஸ்வரியாக அனைவரையும் அலற விட்டுக் கொண்டிருப்பவர் நடிகை பிரியா ராமன். வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்து தனக்கென ஓர் இடத்தையும் பிடித்துவிட்டார்.
பிரியா ராமன் 14-09-1974 அன்று கேரள மாநிலத்தில் எர்ணாகுளத்தின் அலுவாவில் பிறந்தார். திரைப்பட நடிகை, திரைப்பட தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகை மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் என பல விஷயங்களுக்காக அறியப்படுகிறார். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றியுள்ளார்.
1993 ஆம் ஆண்டில் ’சைன்யம்’ திரைப்படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் பிரியா. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கி, மம்மூட்டி ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் 1994-ல் தான் வெளியானது. அதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுதி, தயாரித்த வள்ளி படம் ரிலீஸானது. அதன்படி ‘வள்ளி’ தான் பிரியாவின் முதல் படம்.
சூரியவம்சம் உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த பிரியா நடிகர் ரஞ்சித்தை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இருப்பினும் தனிப்பட்ட காரணங்களால் 2014-ல் இருவரும் சட்டபூர்வமாக பிரிந்துவிட்டனர். அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் ரஞ்சித்.
செம்பருத்தியில் ஆதியின் அம்மாவாக தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பிரியா ராமன், ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார். பிரியாவுக்கு பயணம் செய்வதும், படங்கள் பார்ப்பதும், சமையல் செய்வதும் பிடித்தமானவைகள்.
மஞ்சளும், சிவப்பும் பிரியா ராமனுக்கு ஃபேவரிட் கலர். நடிகர்களைப் பொறுத்தவரை, ரஜினியும், ஸ்ரீதேவியும் தான் இவரின் ஃபர்ஸ்ட் சாய்ஸ். உணவு என்றால் அது மீன் தான், எல்லா மீன் உணவுகளும் பிரியா ராமனுக்கு பிடிக்கும் என்கிறது நெருங்கிய வட்டாரம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.