New Update
![யாருய்யா அந்த தாடி வாலா? செம்பருத்தி நாயகிக்கு இப்படித்தான் மாப்பிள்ளை வேணுமாம்!](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2021/02/shabana.jpg)
Serial Actress Shabana Say About her Husband : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் அக்டோபர் முதல் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் செம்பருத்தி. 90-களில் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நாயகியாக நடித்து வந்த பிரியா ராமன் இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் கதையின் நாயகன் ஆதியாக கார்த்திக் ராஜ், நாயகி பார்வைதியாக ஷாபனா ஷாஜகான் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடர் 1000 எபிசோடுகளை நெருங்கி வரும் நிலையில், இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.
அதிலும் குறிப்பாக ஆதி – பார்வதி ரெமான்ஸ் ரொமான்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் பார்வதியாக நடித்து வரும் ஷபானாவின் கியூட்டான நடிப்புக்கு ஏகப்பட்ட இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். இதனால் இந்த தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகை ஷாபனா தனது திருமணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் பிரபல தொகுப்பாளர் ஒருவர் ஷாபனாவிடம், எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு 'அடுத்த வருடம்' என பதில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாப்பிள்ளைக்கு தாடி இருக்கனுமா, இருக்காகூடாதா? என கேட்டதற்கு "கண்டிப்பா தாடி இருக்கனும், தாடி இல்லாமல் எல்லாம் ஒரு பையனா" என ஷபானா பதில் கூறியுள்ளார்.
இதன் மூலம் ஷாபனா தாடி வைத்த ஒருவரைத்தான் திருமணம் செய்ய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மேலும் அவர் அடுத்த வருடம் திருமணம் என்று கூறியுள்ள நிலையில், தாடி வைத்த மாப்பிள்ளை தான் வேண்டும் என்று கூறியுள்ளதால், அவருக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்யப்பட்டுவிட்டதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதில் செம்பருத்தி தொடரில் நாயகன் கதாபாத்திரமும் தாடி வைத்தபடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.