sembaruthi serial promo : டிவி சீரியல் லிஸ்டில் மிகப் பெரிய போட்டியாக, டிஆர்பி-யில் கடந்த மாதம் முதலிடம் பிடித்த செம்பருத்தி சீரியலில் இன்றைய ப்ரோமில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிக் காத்துக் கொண்டிருக்கிறது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி சீரியல் பற்றி அறிமுகவே தேவையில்லை.
ஆரம்பத்தில் இந்த சீரியல் சாதாரணமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், திடீரென்று டி.ஆர்.பி-யில் கடந்த மாதம் முதலிடத்திற்கு வந்துவிட்டது. இதனால், இந்த சீரியலில் இடம்பெற்ற ஒட்டு மொத்த குழுவினரும் குஷியில் உள்ளனர்.
இந்த தொடரில் நடித்து வரும் செம்பருத்தி எனும் சபானா கேரக்டர் சீரியல் பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு சீரியல் ஹீரோவான கார்த்தி. இவருக்கு இருக்கும் பெண் ரசிகைகள் சமூகவலைத்தளங்களில் தினம் தினம் போஸ்டர்களாக திகைக்க வைத்து விடுகின்றன.
இப்போது சீரியலில் ஆதி ரோல் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறது. தனது தம்பி அருணுக்காக ஆதி எடுத்திருக்கும் மிகப் பெரிய முடிவு தான் இன்றைய நாளில் ப்ரோமவாக வெளியிட்டுள்ளனர். ஆதியின் நலனுக்காக சொத்தையே இரண்டாம் பிரிக்க முடிவு எடுக்கிறார் ஆதி. இதற்கு அவரின் தாயார் அகிலாண்டேஸ்வரியும் பச்சைக் கொடி காட்டுகிறார்.