என்ன ரோஜா... நீங்களே பூவை பார்த்து பயப்படலாமா... பிரியங்காவின் வைரல் வீடியோ

கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி.

கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி.

author-image
WebDesk
New Update
திருமண கோலத்தில் ரோஜா நடிகை... பிரியங்கா வீட்டில் நடந்த பெரிய விசேஷம்

சின்னத்திரையின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மனத்தில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்துள்ள நடிகை பிரியங்கா நல்காரி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவு வைரலாகி வருகிறது.  

Advertisment

கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. தொடர்ந்து 2014-ம் ஆண்டு தெலுங்கில், மகமாலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி வைத்த பிரியங்கா நல்காரி, தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார்.

தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிரியங்கா தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்த சீரியல் மூலம் பிரியங்கா என்ற இவரது உண்மையான பெயர் மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைக்கின்றனர். அந்த அளவிற்கு ரோஜா கேரக்டருக்கு பிரியங்கா உயிர் கொடுத்துள்ளார். சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்ளகில் ஆக்டீவாக இருக்கும் இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisment
Advertisements

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் கை நிறைய பூவைத்திருக்கும் பிரியங்கா அதை மேலே தூக்கி போடுகிறார். அருகிலேயே பூச்செடி இருக்கும் நிலையில், திரும்பவும் பூ தூக்கியப்போட ஒருவர் பிரியங்காவின் கையில் சில பூக்களை தருகிறார்.

ஆனால் அந்த பூக்களை பார்த்த பிரியங்கா அதிர்ச்சியில் அதை கீழே விட்டுவிட்டு தெரிச்சி ஓடுகிறார். இதில் முதலில் நாம் நினைப்பது இப்படி ஆனால் ரியலிட்டி இப்படிதான் இருக்கும் என்பதை உணர்த்துவம் வகையில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சில தெலுங்கு படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த பிரியங்கா, தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யனும் குமாரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 2019-ம் ஆண்டு காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Priyanka Nalkari

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: