சின்னத்திரை நடிகர்அர்ணவ்க்கு நிபந்தனை பிணை (ஜாமின்) வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகர் அர்ணவ், நடிகை திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் திவ்யா மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் அர்ணவ் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்தப் புகாரில் நடிகர் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காவலர்கள் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடிகர் அர்ணவ்-ஐ கைது செய்தனர்.
பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, பூந்தமல்லி நீதிமன்றத்தில் தனக்கு பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு பூந்தமல்லி நீதிபதி விடுமுறை என்பதால் அம்பத்தூர் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது திவ்யா தரப்பில் நடிகர் அர்ணவ்வின் பிணை மனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அர்ணவ் வெளியே வந்தால் அவர் சாட்சிகளை கலைக்கக் கூடும் என திவ்யா தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. இந்த நிலையில், அர்ணவ் மீண்டும் பிணை கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு பூந்தமல்லி நீதிபதி ஸ்டாலின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி நடிகர் அர்ணவ்க்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது நடிகர் அர்ணவ் தரப்பு வழக்குரைஞர் இதை குடும்ப வழக்காக பார்க்க வேண்டுமே தவிர குற்ற வழக்காக பார்க்கக் கூடாது என வாதாடினார்.
தொடர்ந்து நடிகர் அர்ணவ்க்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது. நடிகர் அர்ணவ் மீது திருநங்கை ஒருவர் காணொலி வாயிலாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil