/tamil-ie/media/media_files/uploads/2023/06/Divya-Sridhar.jpg)
அர்னவ் - திவ்யா ஸ்ரீதர்
சின்னத்திரை நடிகர் அர்னவ் தனது முன்னாள் மனைவியும் சின்னத்திரை நடிகையுமான திவ்யா ஸ்ரீதர் வீட்டுக்கு வக்கீலுடன் சென்றது சினன்த்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நட்சத்திரங்களான அர்னவ் – திவ்யா ஸ்ரீதர் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில, திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமானார். அவரது கர்ப்ப காலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இவரும் பிரிந்த நிலையில், கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அர்னவ் அடித்து துன்புறுத்தியதாக திவ்யா சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான போலீசார் அர்னவை கைது செய்து செய்த நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளியெ வந்த இவர் தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருகிறார். இதனிடையே கர்ப்பிணியாக இருந்த திவ்யா ஸ்ரீதருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டிருந்த திவ்யா ஷூட்டிங்கிற்கு குழந்தையுடன் சென்று வந்தார்.
இந்நிலையில் நடிகர் அர்ணவ், இன்று தனது வக்கீல்களுடன் திருவேற்காட்டில் உள்ள நடிகை திவ்யாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களை உள்ள விட திவ்யா மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திவேற்காடு போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அர்னவ் இந்த வீடு தனது பெயரில் இருப்பதாகவும், திவ்யா ஸ்ரீதர் அத்துமீறி இங்கே தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். அதே சமயம் அர்னவ் நிபந்தனை ஜாமீனில் இருப்பதால் இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று திவ்யா கூறியதாக அவரது தரப்பு வக்கீல் கூறியுள்ளார். இது குறித்து இவரும் காவல் நிலையம் வந்து புகார் அளித்துவிட்டு தங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்பிக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.