பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது காதல் கணவர் அர்ணவ் மீது புகார் அளித்துள்ள சம்பவம் கடந்த ஒரு வாரமாக பெரும் பரபரப்பை ஏற்பத்தி வரும் நிலையில், தற்போது மகளிர் காவல்நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளதாக நடிகை திவ்யா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘செவ்வந்தி’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் தமிழில்‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானதை தொடர்ந்து தற்போது, ‘மகராசி’ சீரியலிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், அர்ணவ் என்ற பெயரில் தற்போது விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ‘செல்லம்மா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் மற்றும் திவ்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், நடிகை திவ்யா தனது கணவர் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கடந்த வாரம் வெளியிட்ட வீடியோ பதிவு சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் நடிகர் அர்ணவ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், அர்ணவ், ஆவடி காவல் ஆணையரகத்தில் திவ்யா மீது புகார் கொடுத்துள்ளார். அதில், தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் மருத்துவமனையில் இருந்து அவர் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார் என்றும் அர்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கணவர் அர்ணவ் மீது நடிகை திவ்யா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகை திவ்யா, பல்வேறு தகவல்களை முதல் தகவல் அறிக்கையில் இணைக்க வலியுறுத்தியுள்ளேன். கட்டாய மதம் மாற்ற திருமணம் செய்து, தற்போது கதியற்ற நிலைக்கு தள்ளிவிட்டார். என்னுடைய நிலை வேறு எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த அர்ணவ் திவ்யா மதம் மாறினால் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கட்டாயப்படுத்தியாதாகவும், காதலித்ததால் வேறு வழியின்றி தான் மதம் மாறி திருமணம் செய்துகொண்டதாகவும் திவ்யா புகாரில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புகார் தொடர்பான அர்ணவ்க்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் மீது போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “