டிவி சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கம்பம் மீனா. இவருடைய யதார்த்தமான வெகுளித் தனமான நடிப்புக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கம்பம் மீனா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `பாக்கியலட்சுமி' சீரியலில், நடித்து வருகிறார்.
சமீபத்தில் விபத்தில் சிக்கிய கம்பம் மீனாவுக்கு கையில் அடிபட்டதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக, நடிகை கம்பம் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. இப்படித்தான் மனதைத் தேற்றிக் கொண்டேன்! எல்லாம் அவன் செயல்!” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், கையில் ஏற்பட்டிருக்கும் முறிவு சரியாக மூன்று மாதங்கள் ஆகும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நடிகை கம்பம் மீனாவுக்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும், அதே கையோடு 'பாக்கியலட்சுமி' சீரியல் ஷூட்டிங்குக்கு சென்றிருக்கிறார். கம்பம் மீனா கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் பலரும் 'உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என அக்கறையாக கமென்ட் செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“