அம்மாக்கள்தானே மகள்களுக்கு ஆறுதல் கூறுவார்கள்... ஆனால், நீபா மகளைப் பாருங்கள்!
நடிகை நீபா சூப்பர் மாம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் தோல்வியைத் தாங்க முடியாமல் மேடையிலேயே கண்கலங்கி அழுதார். அப்போது அவரது மகள் அவரை ஆறுதல்படுத்தி சமாதானம் செய்தது பலரையும் நெகிழச் செய்தது.
serial actress neepa cry, neepa cry in zee tamil tv, zee tv super mom show, சிரியல் நடிகை நீபா, சூப்பர் மாம், ஜீ தமிழ், neepa daughter solves her crying, neepa daughter, super mom reality show
விஜய் டிவி, கலைஞர் டிவி, உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளிலும், விஜய்யின் காவலன் போன்ற படங்களில் நடித்த நடிகை நீபா சூப்பர் மாம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத நீபா தாங்க முடியாமல் நிகழ்ச்சி மேடையிலேயே கண்கலங்கி அழுதார். அப்போது அவரது மகள் அவரை ஆறுதல்படுத்தி சமாதானம் செய்தது பலரையும் நெகிழச் செய்தது.
Advertisment
கலைஞர் டிவில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய அபாரமான நடனத்தால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை நீபா.
நீபா தனது நடனத்திறமையால், சன் டிவியில் ஒளிபரப்பான ‘மஸ்தானா மஸ்தானா’ மற்றும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னரானார்.
நடிகை நீபா பின்னர் ‘கவியாஞ்சலி’ என்ற விஜய் டிவி தொலைக்காட்சி திரையில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து, பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இப்படி சின்னத்திரையில் கலக்கி வந்த நீபா நடிகர் விஜய் நடித்த காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து தனது நடிப்பால் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
காவலன் படத்தை தொடர்ந்து ‘பெருசு’, ‘பள்ளிக்கூடம்’, ‘தோட்டா’, ‘கண்ணும் கண்ணும்’, ‘அம்முவாகிய நான்’ உள்பட பல படங்களில் தொடர்ந்து நடித்த நடிகை நீபா ரெண்டு படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
நடிகை நீபா கடந்த 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. திருமணத்துக்குப் பிறகும், நீபா சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்தார்.
இந்த நிலையில், நடிகை நீபா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் மாம்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சூப்பர் மாம் என்றால் யார் சிறந்த தாய் என்பதுதான் போட்டி.
தாய், மகள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது மூன்றாவது ஒளிபரப்பாகிவருகிறது. இந்த மூன்றாவது சீசனில் நடிகை நீபாவும் அவரது மகளும் கலந்துகொண்டனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் எபிசோடில் போட்டி விதிகளின்படி நீபா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால், நீபா நிகழ்ச்சி மேடையிலேயே கண்கலங்கி அழுதார். இதனால், பார்வையாளர்கள் வருத்தமடைந்தனர்.
நிகழ்ச்சியில் நீபா அழுவதைப் பார்த்த அவரது மகள் ‘பரவா இல்லம்மா.. அடுத்த முறை பார்த்துக்கலா’ என்று ஆறுதல் கூறி தேற்றினார். இந்த நிகழ்வு தொலைக்காட்சி பார்வையாளர்களை நெகிழச் செய்தது.
பொதுவாக இது போன்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களில் மகள்கள் தான் தோல்வியை தாங்க முடியாமல் அழுவார்கள். அப்படி அழுகிற மகள்களை அவர்களுடைய அம்மாக்கள்தான் தேற்றி சமாதானப்படுத்துவார்கள்.
ஆனால், நீபாவை அவருடைய மக்கள் ஆறுதல் கூறி தேற்றி சமாதானப்படுத்தியதைப் பார்த்த பலரும் நீபாவின் மகளைப் பாராட்டிவருகின்றனர்.