/tamil-ie/media/media_files/uploads/2023/06/Seetha.jpg)
பிரியங்கா நல்காரி சீதாராமன் சீரியல்
ரோஜா சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி தற்போது ஜீ தமிழின் சீதாராமன் சீரயலில் நடித்து வந்த நிலையில், இந்த சீரியலில் இருந்து தற்போது விலகியுள்ளார்.
சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தெலுங்கு சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், அடுத்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். முதல் சீரியலே இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொடுத்தது.
இந்த சீரியலில் ரோஜா – அர்ஜூன் இடையேயான ரொமான்ஸ் காட்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சீரியல் நடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், பிரிங்கா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. அதன்பிறகு உடனடியாக பிரியங்கா ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானர். இந்த சீரியலின் ஒளிபரப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
இதனிடையே சமீபத்தில் தனது நீண்டநாள் காதலர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்ட பிரிங்கா தனது கணவருக்காக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்படி நேற்றைய தினம் கடைசி சீதா மேக்கப் என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அந்த சீரியலின் நாயகனா ஜேடிசவுசாவும் சீதாவின் கடைசி நாள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், பிரிங்கா தொடர்ந்து சீரியலில் நடிக்க வேண்டும் என்று கேரிக்கை எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.