நீங்கள் செய்த வரைக்கும் போதும்... நல்லா இருங்க... கலர்ஸ் டிவியை கடுமையாக விமர்சித்த நடிகை
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் மகா என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் கிடைத்து
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் மகா என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் கிடைத்து
சின்னத்திரையின் முக்கிய நடிகைகளில் ஒருவரான ரக்ஷிதா மகாலட்சுமி தான் நடித்து வந்த இது சொல்ல மறந்த கதை சீரியல் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
Advertisment
சின்னத்திரையின் முக்கிய நடிகைகளில் ஒருவரான ரக்ஷிதா விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், சரவணன் மீனாட்சி சீசன் 2, சீசன் 3, ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். இதன் மூலம் முன்னணி சீரியல் நடிகையாக உயர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து பல இவர் நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் மகா என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் கிடைத்து என்று சொல்லாம். பரபரப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் இருந்த ரக்ஷிதா மகாலட்சுமி திடீரென விலகுவதாக அறிவித்தார்.
Advertisment
Advertisements
கன்னட சினிமாவில் நாயகி வாய்ப்பு கிடைத்ததால் அவர் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகவும் விலகியதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழின் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வந்தார். சத்யா சீரியல் புகழ் விஷ்ணு நாயகனாக நடித்த இந்த சீரியல் தொடர்ந்து பாசிட்டீவான விமர்சனங்களை பெற்று வந்தது.
சாதனா என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்த ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது விரக்தியின் உச்சத்தில் இருப்பது போல் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது சொல்ல மறந்த கதை சீரியலிக் சாதனா கேரக்டர் இப்படி முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. கருத்துள்ள சீரியலை முடித்ததற்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு வாழ்த்தக்கள்.
நாங்கள் உங்களின் போலியான ப்ரமோஷன்களில் இருந்து இனிமேல் ஃபரீயாக இருக்கலாம். உங்களிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த சீரியலில் நடிக்க வேண்டாம் என்று என்னிடம் சொல்லி சிரித்தவர்கள் அனைவரையும் திட்டிவிட்டு இந்த சீரியலில் நடிக்க வந்தேன். ஆனால் நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன் என்று கலர்ஸ் டிவி உணர வைத்துள்ளது.
நீங்கள் செய்தவரைக்கும் போதும் நல்லா இருங்க சாதனாவை நான் மிகவும் மின் செய்கிறேன். இந்த கார்ப்பரேட் உலகத்தில் யாராலும் நிலைத்திருக்க முடியாது… குட் பை சாதனா என்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் ரக்ஷிதா மகாலட்சுமி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news