/tamil-ie/media/media_files/uploads/2022/07/Radhika-1.jpg)
சின்னத்திரையில் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் ஒரு சீரியல் முடிந்துவிட்டால் அடுத்த சில நாட்களில் ஒரு புதிய சீரியல் களமிறங்கும். அதேபோல் முடிந்துவிட்ட சீரியலில் நடித்த பல நட்சத்திர்கள் இந்த புதிய சீரியலிலும் லீடு ரோலில் நடிப்பது வழக்கம்.
ஆனால் ஒரு சீரியலில் இருந்து பாதியில் விலகிய நடிகைள அந்த சேனலில் மற்றொரு சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பது எப்போதாவது நடக்கும் நிகழ்வு. அந்த வகையில் தற்போது சன்டிவி சீரியலின் பூவே உனக்காக சீரியலில் இருந்து பாதியில் விலகிய நடிகை ராதிகா ப்ரீத்தி தற்போது சன்டிவியின் புதிய சீரியல் ஒன்றின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பூவே உனக்காக சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராதிகா ப்ரீத்தி. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூவே உனக்காக சீரியலும் முடிவுக்கு வந்தது.
இதனிடையே தமிழில் எம்பிரான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ராதிகா ப்ரீத்தி கன்னடாவில் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவரின் நாதிருதின்னா படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில். தற்போது ராதிகா ப்ரீத்தி மீண்டும் சன்.டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூவே உனக்காக சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த அருண் விஜய் டிவியின் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வரும் நிலையில், ராதிகா மீண்டும் சன்டிவி சீரியலில் நடிக்க உள்ளார். பூவே உனக்காக சீரியல் மூலம் பிரபலமான இவர் தற்போது மீண்டும் சன்டிவி சீரியலில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.