பிரபல சீரியல் நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன் ராசாத்தி என்ற பாடலுக்கு நடனமாடியுள்ள நிலையில், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன், பாடகர் அந்தோணி தாசன் உள்ளிட்ட சிலருடன் வெளியாகியுள்ள இந்த பாடலின் ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன். சென்னையில் பிறந்து வளர்ந்த ரோஷினி, சென்னை செயின்ட் மேரீஸ் பெண்கள் பள்ளியில் பள்ளி படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றவர். கல்லூரி முடித்ததும், ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாடலிங் துறையில் புகுந்த ரோஷ்னி, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய பெயரை பெற்றார். தொடக்கத்தில் சரியாக போகாவிட்டாலும், அடுத்தடுத்து வந்த எபிசோடுகள் ரோஷ்னியின் நடிப்புக்கு பாராட்டுக்களை பெற்று கொடுத்தது.
தொடந்து சிறப்பான வரவேற்பை பெற்று வந்த ரோஷ்னி திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வந்தாலும், ரோஷ்னியை பல ரசிகர்கள் மிஸ் செய்வதாக தினமும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சீரியலில் இருந்து விலகினாலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன், தற்போது ஆல்பம் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். ராசாத்தி என்று தொடங்கும் இந்த பாடலில், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன், பாடகர் அந்தோனி தாசன், கே.ஜே.அய்யனார் உள்ளிட்டோர் வேட்டியுடன் கோட் அணிந்து பாடுகின்றனர்.
இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் ரோஷ்னிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“