சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இல்லத்தரசிகளின் ஆதரவை பெற்றுள்ள இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றியை பெற்றுள்ளது.
Advertisment
இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வருபவர் சாய் காயத்ரி. ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமான இவர் மதுரையை சேர்ந்தவர்.
Advertisment
Advertisements
சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்த சாய் காயத்ரி, கல்லூரியில் படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.
2011 விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார். இந்த தொடரில் தனது சொந்த குரலில் பேசியுள்ளார்.
ஜெயாடிவியில் கில்லாடி ராணி என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்தார் சாய் காயத்ரி. தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலிலும் நடித்துள்ளார்.
இவருக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது ஈரமான ரோஜாவே சீரியல் தான். அகிலா என்ற கேரக்டரில் நடித்து வந்த இவர், தனது கேரக்டருக்கு தானே டப்பிங் பேசியுள்ளார்
அதன்பிறகு பாண்டியன ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த இவர் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாய் காயத்ரி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சேலையில் வெளியிட்டள்ள இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil