Advertisment

அப்பா- மகள் உறவை தப்பாக பேசுவதா? ஷகிலா மீது சம்யுக்தா காட்டம்

விஷ்ணுகாந்த் யூடியூப் சேனல்களின் பேட்டியிலும், சம்யுக்தா தனது சமூகவலைதள லைவ்விலும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samyuktha

டிவி நடிகை சம்யுக்தா

டிவி நடிகர்கள் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா திருமண முறிவு தொடர்பான மோதல்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விஷ்ணுகாந்தை பேட்டி எடுத்த நடிகை ஷகிலாவுக்கு சம்யுக்தா பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் சிற்பிக்குள் முத்து சீரியலில் இணைந்து நடித்திருந்த விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் சுமார் 7 மாதங்கள் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தங்களது சமூக வலைதளங்களில் இருந்து திருமண புகைப்படங்களை நீக்கியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து விஷ்ணுகாந்த் யூடியூப் சேனல்களின் பேட்டியிலும், சம்யுக்தா தனது சமூகவலைதள லைவ்விலும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் விஷ்ணுகாந்த் சில முக்கியமான ஆடியோ பதிவுகளை வெளியிடுவதும் அதற்கு சம்யுக்தா பதில் அளித்து வருவதும் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சம்யுக்தா தனக்கு ப்ரபோஸ் செய்துவிட்டு வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார் என்று விஷ்ணுகாந்த் தெரிவித்திருந்தார்.

அதேபோல் தனது மாதவிடாய் காலத்திலும் தன்னை புரிந்துகொள்ளாமல் விஷ்ணுகாந்த் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அவருக்கு 24 மணி நேரமும் ரொமான்ஸ்’ தேவைப்படுகிறது என்றும் சம்யுக்தா அடுக்கடுக்கான பல புகார்களை முன்வைத்திருந்தார். இவர்களின் இந்த மோதல் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் யூடியூப் சேனல்கள் இவர்களை பேட்டி எடுத்து வருகின்றன.

Shakila

நடிகை ஷகீலா

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஷகிலா விஷ்ணுகாந்தை பேட்டி எடுத்திருந்தார். இதில் சம்யுக்தாவுக்கும் அவரது அப்பாவுக்கும் இடையே ஏதாவது உறவு இருக்கிறதா என்று ஷகிலா கேட்டதாக கூறப்படுகிறது. இந்த கேள்விக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ள சம்யுக்தா முதல்முறையாக தனது பெற்றோருடன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் விஷ்ணுகாந்தை பேட்டி எடுத்த ஒரு பெண் ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

எப்படிதான் இப்படி ஒரு மோசமான கேள்வியை கேட்கிறார்களோ. அவர்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? பொது இன்டர்வியூ எடுப்பவர்கள் யாருக்கும் ஒருதலைபட்சமாக இருக்கமாட்டார்கள். ஆனால் அந்த பெண் நடிகை அப்படியெல்லாம் பேசியிருக்கிறார். அப்பா பெண் இடையில் இருக்கும் உறவை இவ்வளவு கேவலமாக பேசுபவர்கள் என்ன மாதிரியான ஒரு மனநிலையில் இருப்பார்கள்?

என்னை பற்றி ஜட்ஜ் பண்ண அந்த நடிகை யார்? இந்த மாதிரியான கேள்வியை அவரே கேட்டாரா அல்லது விஷ்ணுகாந்த் சொல்லித்தான் கேட்டாரா? பேட்டி எடுக்கும் ஒரு செய்தியாளர் இப்படியெல்லம் பேசலாமா? என்று கேட்டுள்ளார். இதேபோல் சம்யுக்தாவின் அப்பாவும், ஒரு அப்பா பொண்ணை கேவலப்படுத்தி மீடியாவில் கேள்வி கேட்பது சரியானதா? நாம தமிழ்நாட்டில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட புத்தி உள்ளவர்களை என்ன செய்வது என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment