Sharanya Turadi Tamil News: சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை சரண்யா துராடி. இவர் விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். முன்னதாக இவர் 2012ம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' என்ற படத்திலும், 2015ம் ஆண்டு வெளியாகிய 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், சரண்யா அவரது பார்வையை சின்னத்திரை பக்கம் திரும்பினார். அவருக்கு சின்னத்திரை சீரியல் கைகொடுத்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.
சரண்யா துராடி நெஞ்சம் மறப்பதில்லை சீரியலுக்கு பிறகு 'ரோஜா' என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். இதனைத்தொடர்ந்து அவர், சன் டிவியின் ரன் சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு, சரண்யாவை மேலும் பிரபலமடைய செய்தது. ஆனால் அவரோ இந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார்.
பிறகு சரண்யா, விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் தோன்றினார். தொடர்ந்து அவர் விஜய் டிவியின் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலிலும் நடித்தார். இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார்.
எனினும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சரண்யா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும், தனது வாழ்வில் நடைபெறும் மகிழ்ச்சியான தருணங்களையும் அவர் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சரண்யா துராடி தான் புதிதாக வாங்கியுள்ள சொகுசு காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படம் தற்போது இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தனது புதிய பிஎம்டபுள்யூ கார் உடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள சரண்யா அந்த பதிவில், "புது காதல் கதை தொடங்குகிறது. எங்கள் குடும்பத்திற்கு "சீம்சு" என்ற புதிய உறுப்பினரை வரவேற்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
சரண்யா துராடி வாங்கியிருப்பது பிஎம்டபுள்யூ எக்ஸ்5 (BMW X5) கார் ஆகும். சென்னையில் இதன் விலை ஒரு கோடியே 14 லட்சம். தமிழ் சினிமாவில் இதுபோன்ற பிஎம்டபுள்யூ எக்ஸ்5 காரை சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நடிகை நயன்தாரா வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.