Advertisment

”நிதானமாக வாழ விரும்புகிறேன் என்பது ஏன் வேறு மாதிரியாக பார்க்கப்படுகிறது” - ஷ்ருதி ஹாசன் கேள்வி...

குடிக்கும் மக்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது 2019-ல் கேலிக்குரியதாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shruti Haasan

Shruti Haasan

Shruti Haasan: சில ஆண்டுகளாக படங்களில் இருந்து ஓய்வு பெற்றவராக இருந்தார் நடிகை ஷ்ருதி ஹாசன். அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட தெலுங்கு தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அங்கு தான் பேசிய விஷயம், அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக மாறும் என அப்போது ஷ்ருதிக்கு தெரியாது. மதுவைப் பற்றி பேசுகையில், “நான் இனி குடிக்க மாட்டேன். இரண்டு வருடங்கள் ஆகின்றன. நான் இப்போது நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன்” என்றார் ஷ்ருதி ஹாசன். அதைத் தொடர்ந்து அவருக்கு, எப்படி குடிப்பழக்கம் வந்தது என்பதைப் பற்றிய செய்திகள் வலம் வரத் தொடங்கின.

Advertisment

“அந்த அரட்டை நிகழ்ச்சியில், நான் இனி குடிக்க மாட்டேன், இப்போது நான் நிதானமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன்” என்ற ஸ்ருதி ஹாசன், ”குடிப்பழக்கம் இன்றைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. அதில் எந்த களங்கமும் இல்லை. ஆனால் நான் இதை நான் இனியும் செய்ய விரும்பவில்லை. நிதானமான வாழ்க்கை வாழவே நான் விரும்புகிறேன். குடிப்பவர்களைப் பற்றி நான் எந்த முடிவுக்கும் வருவதில்லை.

எல்லோரும் குடிக்கிறார்கள்,  ஆனால் அதைப்பற்றி யாரும் வெளியே பேசாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. குடிக்கும் மக்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது 2019-ல் கேலிக்குரியதாகும். ”இனி குடிக்காமல், நான் நிதானமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்” என்று நான் சொல்லும் போது, ஏன் இது வேறுமாதியாக பார்க்கப்படுகிறது?” என்றார்.

 

Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment