Advertisment

'பெண்களை அறைவது, தொப்புளைக் கிள்ளுவது': நான் கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தை இழந்த காரணம் இதுதான்: நடிகர் சித்தார்த்!

இதுபோன்ற கேரக்டர்களை நிராகரிப்பதால் கமர்ஷியல் பட நாயகனாக வெற்றிப் படிக்கட்டில் ஏற முடியவில்லை என்று சித்தார்த் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

author-image
WebDesk
New Update
Actor Siddarth

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த் தனக்கு வந்த பட வாய்ப்புகள் குறித்தும், அதிகமாக பட வாய்ப்புகளை இழந்த காரணம் குறித்தும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

சினிமா உலகில், தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவதில் தயங்காதவர் நடிகர் சித்தார்த். அவரது வார்த்தைகள் சர்ச்சையாகவும், பலமுறை விவாதப் பொருளாகவும் மாறியிருந்தாலும், ஒரு கேள்விக்கு பதிலளிக்கவோ அல்லது மனதில் உள்ளதைச் சொல்லவோ சித்தார்த் எப்போதும் தயங்கியதில்லை.

Read In English: Siddharth said he missed out on stardom for rejecting scripts where he was ‘slapping women, pinching navels’: ‘Rejected them outright’

அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற ஹைதராபாத் இலக்கிய விழாவில், சித்தார்த், தனது மனைவியும் நடிகையுமான அதிதி ராவ் ஹைதரியின் தாயார், திறமையான பாடகி மற்றும் எழுத்தாளர் வித்யா ராவ் உடன் பேசினார், இதில் அவர்கள் இருவரும் சினிமா மற்றும் இலக்கியத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தனர். சுவாரஸ்யமாக, அவர்களின் விவாதத்தில், ஒன்று ஆண்மையின் நச்சுத்தன்மை என்ற கருத்தை ஆராயும் ஒரு பேச்சு இருந்தது.

Advertisment
Advertisement

சித்தார்த் வேண்டுமென்றே திரையில் ஆண்மையின் பெருமை பேசும் கேரக்டர்களில், நடிப்பதில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும், அத்தகைய கேரக்டர்களை நிராகரிப்பதால், ஒரு கமர்ஷியல் ஹீரோ வெற்றியின் ஏணியில் ஏற முடியாது என்பதையும் சித்தார்த் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். “பெண்களை அறைவது, ஐட்டம் பாடல்கள் செய்வது, ஒருவரின் தொப்புளைக் கிள்ளுவது, ஒரு பெண் என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று சொல்வது போன்ற ஸ்கிரிப்ட்களை நான் முற்றிலும் நிராகரித்தேன்.

நிச்சயமாக, நான் வித்தியாசமாக இருந்தால் இன்று மிகப் பெரிய திரைப்பட நட்சத்திரமாக இருக்கலாம். ஆனால் உள்ளுணர்வாக நான் விரும்பியதைச் செய்தேன். மக்கள் எனது நோக்கத்தைப் புரிந்துகொள்வதை விரும்புகிறேன். “இன்று, நான் பெண்களை மதிக்கிறேன், பெற்றோரிடம் குழந்தைகளுடன் நன்றாக இருக்கிறேன்,, நான் அழகாக இருக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்த படங்களை அவர்களின் குழந்தைகள் பார்க்கலாம். இது மிகவும் மகிழ்ச்சிகரமான உணர்வு.

இது இயல்பாகவே நடந்திருக்கலாம், ஆனால் அது கிட்டத்தட்ட ஒரு தனிமையான போர் என்று தான் சொல்ல வேண்டும். “இந்த உணர்வு கோடிக்கணக்கில் அளவிடக்கூடிய ஒன்றல்ல. என்னைச் சுற்றியுள்ள அனைவரும் ஆக்ரோஷமாகவும், ஆண்மையுடனும் இருக்க முயன்றனர். பலர் அனைவரும் ஆண்கள் வலியை உணராவதவர்கள் போன்று இருந்தபோது, திரையில் அழுவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன் என்று சித்தார்த் கூறியுள்ளார்.

ஒரு நடிகராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சித்தார்த் வழக்கமான வணிக ரீதியான படங்களிலிருந்து விலகி இருக்கும் முயற்சியில், தனது பல்துறைத்திறனை ஆராய்ந்த படங்களில் நடித்தார், மேலும் ஒரு வழக்கமான ஹீரோவின் எல்லைகளைத் தாண்டிச் சென்றார். அவரது சமீபத்திய தயாரிப்பான சித்தா, கதை முக்கியத்துவம் பெற்றதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ஆனால் தற்போதுவரை பெரும்பாலும், சித்தார்த் பின்தங்கியிருந்தார்.

சமீபத்தில் தமிழ் காதல் படமான மிஸ் யூ படத்தில் நடித்த சித்தார்த், தற்போது நயன்தாரா மற்றும் மாதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள டெஸ்ட் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். சமீபத்தில் ராம் சரண் படமான கேம் சேஞ்சரை இயக்கிய இயக்குனர் ஷங்கரின் அடுத்த படமாக வெளியாக உள்ள இந்தியன் 3 படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Siddharth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment