விரைவில் திரைக்கு வரும் ’சித்தா’; படக் குழுவினருடன் பழனி முருகனை தரிசிக்கும் சித்தார்த்

இந்த வருடத்தின் மிகச்சிறந்த படமாக ’சித்தா’ இருக்கும்; நடிகர் சித்தார்த் நம்பிக்கை; படக்குழுவினருடன் பழனி முருகனை தரிசிக்க பயணம்

இந்த வருடத்தின் மிகச்சிறந்த படமாக ’சித்தா’ இருக்கும்; நடிகர் சித்தார்த் நம்பிக்கை; படக்குழுவினருடன் பழனி முருகனை தரிசிக்க பயணம்

author-image
WebDesk
New Update
Siddharth

சித்தா படம் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சித்தார்த் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் ’சித்தா’. இந்த திரைப்படம் விரைவில் திரையில் வரவிருக்கும் நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என படக்குழுவினர் வேண்டி பழனிக்கு செல்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் இன்று கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது; சித்தா திரைப்படம் இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உண்மை சம்பவங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த படம், சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தை இருவருக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படம் குழந்தை கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம், என்று கூறினார்.

மேலும், பழனியில் மூன்று மாதமாக படப்பிடிப்பு நடந்த நிலையில், சித்தா படம் வெற்றி பெற பழனி முருகனை படக்குழுவினருடன் தரிசிக்க செல்வதாகவும் நடிகர் சித்தார்த் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Siddharth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: